15 வயது சிறுமி துஷ்பிரயோகம் - வயிற்றில் இரட்டைக் குழந்தைகள்
- பாலித ஆரியவன்ஸ -
ஹாலிஎல- லந்தேவல பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியொருவர் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் 21 வயது சந்தேகநபர் ஒருவர் ஹாலி எல பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி நோய்வாய்ப்பட்டதையடுத்து, அவரது பெற்றோர், சிறுமியை பதுளை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது, சிறுமி கர்ப்பம் தரித்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், 5 மாதங்களான இரட்டைக் குழந்தைகள் சிறுமியின் வயிற்றில் வளர்கின்றமை வைத்திய பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சந்தேகநபரான இளைஞர்,பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியிருந்தார்.
எனினும் சந்தேகநபரை ஹாலிஎல பொலிஸார் கைதுசெய்து, அவரை பதுளை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய நிலையில், சந்தேகநபரை அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த செய்திகளை வௌியிடுவதைத் தயவுசெய்து நிறுத்துங்கள்,அதனை நீங்கள் தொடர்ந்தால் லங்காதீப பத்திரிகையின் தரத்துக்கு உங்கள் இணையத்தையும் கொண்டு செல்லும்.அது நாட்டை வழிநடாத்தும் அரசும் காவல்துறையும் பார்த்துக் கொள்ளட்டும். இந்த செய்திகள் பொதுமக்களை பெரும் கவலைக்கு உட்படுத்தியபோதிலும் பொதுமக்கள் என்றவகையில் எம்மால் செய்யக்கூடியது ஒன்றுமில்லை.
ReplyDeleteAny way, where is the protesters for justice? come on...
ReplyDeleteIf you didn’t bring these forward then how would people know how protect their children
ReplyDeleteபத்திரிகை என்றால் உலகில் மனிதர்களுக்கு எதிராக நடக்கக்கூடிய அனைத்து விடயங்களையும் வெளிக்கொணர வேண்டும் அதில் எந்த மாறுபாடும் கருத்துகளும் எமக்கில்லை எனவே பத்திரிகை சுதந்திரம்
ReplyDeleteMano Ganesan thookam
ReplyDeleteஇவ்வாறான செய்திகள் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள். உங்கள் ஆள் ரிசார்ட் ஐ காப்பாற்ற என்ன செய்ய முடியுமோ அதை செய்வது தானே கடமை . உலகில் முஸ்லீம் நியாயம் மனித நியாயம் என்று இரு நீதிகள் இருப்பது பலருக்கு தெரியவில்லை
ReplyDelete