Header Ads



ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு, பொறுப்பதிகாரியாக மேனகா மூக்காண்டி நியமனம்


சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி. மேனகா மூக்காண்டி, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும் பிரதிப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

நுகேகொடை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான திருமதி. மேனகா மூக்காண்டி, இலங்கை இதழியல் கல்லூரியில், துறைசார் கல்வியைக் கற்றவராவார்.

15 வருட கால தனது ஊடக வாழ்வில் சிறந்த ஊடகவியலாளராகவும், செய்தி ஆசிரியராகவும் திறம்படக் கடமையாற்றியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளராக திருமதி. மேனகா மூக்காண்டி நியமனம் பெறுவதற்கு முன்னர் ‘தமிழ்மிரர்’ பத்திரிகையின் செய்தி ஆசிரியராகக் கடமையாற்றினார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2021.06.15


1 comment:

  1. சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி. மேனகா மூக்காண்டி, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும் பிரதிப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுளதால் நாங்கள் அவளுக்கு மிகச் சிறந்த ஆசீர்வாதத்தை வழங்குகிறோம். தமிழ் யூடியூப் சேனல்களில், விசேஷமாக பரப்பப்படும் போலி மற்றும் தவறான செய்திகளை அவறால்
    கண்காணிக்கவும் கண்டிக்கவும் முடியும் என்று நம்புகிறேன். தமிழ் பேசும் மக்கள் தங்கள் அரசாங்கத்தைப் பற்றிய உண்மையைப் புரிந்துகொள்ள இது முக்கியம்.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart, Convener "The Muslim Voice" and Member "Viyathmaga".

    ReplyDelete

Powered by Blogger.