Header Ads



அம்பாரை மாவட்ட செயலகத்தின் பிரதான, கணக்காளராக எஸ். எல். ஆதம்பாவா நியமனம்


- ஏ.பி.எம்.அஸ்ஹர் -

அம்பாரை மாவட்ட செயலகத்தின்  பிரதான கணக்காளராக எஸ். எல். ஆதம்பாவா நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை  மாவட்ட செயலக பிரதான உள்ளக கணக்காய்வாளராக கடமையாற்றி வந்த இவர்   பிரதான கணக்காளராகநியமிக்கப் பட்டதை தொடர்ந்து இன்று மாவட்ட செயலக பிரதான  கணக்காளராக அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக முன்னிலையில் உத்தியோக பூர்வமாக கடமையேற்றார். 

இந்நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் நிதிப் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர் 

இவர்  17.07.1995 இல் கணக்காளர் சேவையில் Sri Lanka Accountant Service  தேர்வாகி பொத்துவில் பிரதேச செயலக கணக்காளராக முதல் நியமனம் பெற்று அதனைத் தொடர்ந்து 2000ம் ஆண்டு வலயக் கல்வி அலுவலகம் சம்மாந்துறை க்கு இடமாற்றம் செய்யப்பட்டார்  அதனைத் தொடர்ந்து 2006இல் முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நிதி

2006 தரம் 1 இற்கு பதவி உயர்வு பெற்றார் 

2012 மாகாண வருமான முகாமைத்துவ பிரிவு  பிரதான கணக்காளராக செயற்பட்டார் 

அதன் பின்னர் 

2015பணிப்பாளர் பாதீடு Director Budjet Eastern province ஆகவும் செயற்பட்டார் 

2018 ஆகஸ்ட் முதல் பிரதான உள்ளக கணக்காய்வாளர்   ஆக பல்வேறு பதவிகளிலும் கடமையாற்றி யுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.