Header Ads



சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற, பொலிஸ் கான்ஸ்டபிள் கைது


- திருகோணமலை நிருபர் பாருக் -

நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாடசாலை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டுக்காக நிலாவெளி பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 35 வயதுடையவர் எனவும் தெரிவிக்கின்றனர். 

13 வயது சிறுமியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

அதேவேளை, சந்தேக நபர் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.