Header Ads



குரங்கு கடித்த தேங்காயுடன் கூட்டத்துக்கு வந்து, துப்பாக்கி வழங்கக் கோரிய தவிசாளர்


முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்துக்கு குரங்கு கடித்த தேங்காயுடன் துணுக்காய் பிரதேச சபையின் தவிசாளர் அ.அமிர்தலிங்கம் வருகை தந்திருந்தார்.

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்றிருந்தது.

இதன் போது துணுக்காய் பிரதேசத்தில் குரங்குகள் தென்னந்தோட்டங்களில் உள்ள தேங்காய்களை கடித்து சே.தப்படுத்தி அழித்து வருவதாக துணுக்காய் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார்.

இதனால், குரங்கைத் துரத்துவதற்கு துப்பாக்கி வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்ததுடன், துப்பாக்கியைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் சிபார்சுக் கடிதத்துடன் துப்பாக்கியைப் பெற்றக்கொள்ளலாம் என இதன்போது எடுத்துரைக்கப்பட்டுள்ளது. TL

No comments

Powered by Blogger.