Header Ads



Mp க்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி குத்தப்படுகிறது - அரைவாசி மக்களுக்கு செலுத்தும்வரை போடமாட்டேன் என்கிறார் ஹரீன்


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு இன்று(16) முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தான் அதனை செலுத்தப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

தனது டுவிட்டரில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார்.

அதாவது, குறைந்தப்பட்சம் ஒரு மில்லியன் பொதுமக்களுக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னரே, தான் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொவிட் அவதான நிலையில் உள்ள தரப்பினர் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி முதலில் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.