Header Ads



முஸ்லிம் விரோத போக்கை, SJB கையில் எடுத்துள்ளதா...? 2 பேர் குறித்து சஜித்திடம் முறையீடு


- மொஹமட்  அன்ஸிர் -

ஐக்கிய மக்கள் சக்தியின், பாராளுமன்ற உறுப்பினர்களான கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்து ஜயவர்த்தனா மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கெஹ்டர் அப்புஹாமி ஆகியோர், காதி நீதிமன்ற முறைக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டமை, ஐக்கிய மக்கள் சக்தி முஸ்லிம பாராளுமன்ற உறுப்பினர்களிடையே அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஐக்கிய மக்கள் சக்தியின், முஸ்லிம பாராளுமன்ற உறுப்பினர்கள், தமது அதிருப்த்தியை கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசாவிடம் வெளிப்படுத்தியுள்ளனர்.

குறித்த 2 பாராளுமன்ற உறுப்பினர்களும் உரையாற்றிய வீடியோவையும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், சஜித்தின் வட்சப்புக்கு அனுப்பி வைத்துள்ளார். (இந்தத் தகவல் குறித்த பாராளுமன்ற உறுப்பினரால், ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தப்பட்டது)

எனினும் இதகுறித்து பொது வெளியில் பேச வேண்டாமென வலியுறுத்தியுள்ள சஜித்       பிரேமதாசா, இதுபோன்ற விடயங்களை தமது அல்லது கட்சியின் செயலாளரான ரஞ்சித் மத்தும பண்டாரவின் கவனத்திற்கு கொண்டு வரும்படியும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் அல்மைக்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர், முஸ்லிம் விரோதப் போக்கை கையில் எடுத்திருப்பது குறித்து, அக்கட்சியின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கவலையையும், தமது ஆர்வத்தையும் இதுதொடர்பில் வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. ALL ARE SAME IDIOT.
    KULLU KAAFIR WAAHIDA

    ReplyDelete
  2. Jaffna Muslim sajith in vanda valatahi apapiye podungal iniyavadu ivanai patri Muslim gal nalla vilangi kollattum! Hirunika da pirachina ve solve pana teriyalla ivanavadu problems solve pandaravadu.anda pakkam champika silent a inavda plan arambichi kondu poran adatku adayalam than Muslim, tamil urippinar niragaripu imthiyas, kabir ku sinhala votes adigam adanal than bommai madri vaitu iruki!Muslim gale ivan katchiku vakalitu talayil manna potu kolla vanam

    ReplyDelete

Powered by Blogger.