PHI அதிகாரிகள் மீது எச்சில் துப்பியவக்கு 6 ஆண்டுகள் சிறை - பானந்துறை நீதிமன்றத்தினால் விசித்திரத் தீர்ப்பு
அட்டுலுகம பகுதியில் வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளருக்கு 6 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று வழக்குகளுக்கு தலா இரண்டு ஆண்டுகள் வீதம் இவ்வாறு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பானந்துறை நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி குறித்த கொரோனா தொற்றாளரை அழைத்துவர சென்ற பொழுதே அவர் இவ்வாறு பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பியதோடு, வாகனத்தில் செல்லவும் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Its not surprised, its not enough if he did this. The spitting to human face is the way of sheithaan
ReplyDeleteகொரோனா பரவியதோ இல்லையோ இனவாதம் மட்டும் எட்டிய இடமெல்லாம் பரவி விட்டது என்பதே உண்மை.
ReplyDelete