என்னிடமும் கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை கேட்டார்கள் – நான் சபதம் எடுத்திருந்தமையால் ஏற்றுக்கொள்ளவில்லை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆட்சிக்காலத்தில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை தங்களுக்கு வழங்குமாறு, வெளிநாட்டு நிறுவனங்கள் விடுத்த வேண்டுகோள்களை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
நான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலும், வெளிநாட்டு நிறுவனங்கள் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நான் எந்த வெளிநாட்டு சக்திக்கும், கிழக்கு கொள்கலன் முனையத்தை வழங்குவதில்லை என சபதமெடுத்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இதேகொள்கையை கொண்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக கொழும்புதுறைமுக கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பான திட்டத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்குள் பல பிரச்சினைகள் காணப்பட்டன பலர் இது தொடர்பில் வேண்டுகோள் விடுத்தார்கள் ஆனால் நான் அதனை கட்டுப்படுத்திவிட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment