கொழும்பு மக்களுக்கே முதலில், கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் - Dr சுதர்ஷனி
இலங்கைக்கு கொரோனா தடுப்பூசியை கொண்டு வருவது தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை (28) நீண்ட பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாக அதற்கான இணைப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க குறிப்பிட்டார்.
தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய பிரிவினரின் தேவை மற்றும் முன்னுரிமை அடிப்படையில் இது தீர்மானிக்கப்படவுள்ளது.
சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு, சனநெரிசல் மிகுந்த கொழும்பு மக்களுக்கு முதலாவதாக இந்தத் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.
இதனிடையே, COVID தடுப்பூசியை பெறுவதற்காக சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சந்திர ஜயசுமன குறிப்பிட்டார்.
Post a Comment