Header Ads



ஏகத்துவக் கொள்கையில் எவ்வித பிழைகளும் கிடையாது - ஜனாதிபதி ஆணைக்குழுவில் அப்துர் ராசிக்


ஏகத்துவக் கொள்ளையில் எவ்வித பிழையும் இல்லை. அது சரியான கொள்கை தான் ஆனால் தவ்ஹீத் இயக்கங்களுக்கு மத்தியில் சில கருத்து வேறுபாடுகள் இருக்கின்றது. என சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (14) வழங்கிய சாட்சியத்தின் போது தெரிவித்தார்.

ஏப்ரல் 21 - உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து வரும் ஜனாதிபதி விசாரனை ஆணைக்குழுவில் இன்று (14) முதல் நாளாக சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச் செயலாளர் சாட்சியம் வழங்கினார். 

இதன் போது, தவ்ஹீத் பெயரில் இயங்கும் அமைப்பினர்கள் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து வரும் ஜனாதிபதி விசாரனை ஆணைக்குழுவில் சென்று உங்கள் செயல்பாடுகள் தொடர்பில் தெளிவூட்டி சாட்சியம் வழங்குங்கள் என தவ்ஹீத் அமைப்புகளுக்கு நீங்கள் அறிவுறுத்தியது ஏன்? என வினவப்பட்ட நேரத்தில் தவ்ஹீத் அமைப்புகளுக்கு மத்தியில் மார்க்க ரீதியில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் - NTJ உள்ளிட்ட தடை செய்யப்பட்ட 3 அமைப்புக்களை தவிரவுள்ள அமைப்புக்கள் ஜனநாயக ரீதியில் செயல்படுபவையாக இருக்கின்ற காரணத்தினால் அது தொடர்பில் உரிய தெளிவுகளை ஆணைக்குழுவில் வழங்குங்கள் என்று அறிவித்தோம்.

அப்படியானால், தவ்ஹீத் கொள்கையில் பிழையில்லை என்று கூறுகின்றீர்களா? என்று ஆணைக்குழுவில் கேட்ட நேரத்தில் ஆம், ஏகத்துவக் கொள்கையில் எவ்வித பிழைகளும் கிடையாது என அப்துர் ராசிக் பதிலளித்தார்.

ஆடல், பாடல், நடனங்களை பற்றி என்ன சொல்கிறீர்கள் என ஆணைக்குழுவில் கேட்க்கப்பட்ட நேரத்தில் இஸ்லாத்தில் இசை தடுக்கப்பட்டுள்ளது. இசையில்லாமல் ஒருவர் அர்த்தமுள்ள பாடல்களை பாடுவதில் தவறில்லை. என அப்துர் ராசிக் பதிலளித்த நேரத்தில் ஒருவர் வாகனம் ஓட்டும் போது இசையுடன் கூடிய பாடலொன்றை கேட்டால் என்ன செய்வீர்கள்? என ஆணைக்குழுவில் கேள்வியெழுப்பப்பட்ட போது, இசையுடன் பாடல் கேட்ப்பது மார்க்கத்தில் தவறு என உபதேசம் செய்வோம் என்று அப்துர் ராசிக் பதிலளித்தார்.

பாடல் கேட்ப்பவர் தவ்ஹீத்வாதியாக இருந்தால் என்ன செய்வீர்கள்? என ஆணைக்குழு சார்பில் கேள்வி மீண்டும் முன்வைக்கப்பட்ட  நேரத்தில், முஸ்லிமாக இருந்தால் பாடல் கேட்ப்பது தவறு என்று உபதேசம் செய்வோம் என அப்துர் ராசிக் பதிலளித்தார்.

இசை இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்று குர்ஆனில் உள்ளதா என ஆணைக்குழு கேள்வியெழுப்பிய நேரத்தில் இசை தடை என குர்ஆனில் குறிப்பிடப்படவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரபூர்வமான வழிகாட்டல்களில் தான் அதற்குறிய தடை இருக்கிறது. 

அப்படியானால் அதற்குறிய ஆதாரத்தை தர முடியுமா? ஆம் ஆதாரத்தை சபைக்கு ஒப்படைக்கிறேன் என அப்துர் ராசிக் பதிலளித்தார்.

இலங்கை தேசிய கீதத்தில் இசையிருக்கிறதே? அதனை பாட வேண்டும் என இலங்கை நாட்டு சட்டத்தில் குறிப்பிடப்பட்டால் என்ன செய்வீர்கள்? அப்போது இஸ்லாத்திற்கு முன்னுரிமை கொடுப்பீர்களா? நாட்டு சட்டத்திற்கு முன்னுரிமை கொடுப்பீர்களா? என ஆணைக்குழு கேள்வியெழுப்பியது. 

எமது அன்றாட வாழ்வியல் செயல்பாடுகளில் இஸ்லாத்தின் வழிகாட்டல்களை தான் பின்பற்றுவோம். நாட்டு சட்டத்தில் குறிப்பிடப்படும் விவகாரங்களில் நாட்டு சட்டத்திற்கு கட்டுப்படுவோம். 

தேசிய கீதத்தை இசைத்தேயாக வேண்டும் என சட்டமாக்கப்பட்டால் நிர்பந்திக்கப்பட்ட நிலையில் அது விதிவிலக்காகி விடும்.

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படக் கூடாது என நீங்கள் உரையாற்றியுள்ளீர்கள் தானே? எனது நினைவுப் பிரகாரம் அப்படி நான் உரையாற்றியதில்லை. மாறாக பௌத்த மதத்திற்கு முன்னுரிமையும், மற்ற மதங்களுக்கு சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்றே நாம் நடத்திய வாழ்வியல் மாநாட்டில் உரையாற்றும் போது தெரிவித்தேன் என அப்துர் ராசிக் இதன் போது பதிலளித்தார்.

நாளை மீண்டும் 11 மணிக்கு சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக்கின் சாட்சியம்  பதிவு தொடரவுள்ளது.

4 comments:

  1. . Br. Razick ஊடகங்களில் முகத்தை மூடுவது நபியின் மனைவிகளுக்கு மட்டுமே என்றும் மற்ற எல்லா பெண்களுக்கும் அது ஹராம் என்றும் கூறினார்!
    அவர் உண்மையில் அனைத்து முஸ்லீம் பெண்களுக்கும் துரோகம் இழைத்தார், மேலும் அனைத்து முஸ்லிமல்லாதவர்களும் இந்த தவறான அறிக்கையை பயன்படுத்திக் கொண்டனர்.
    அவர் அல்லாஹ்விடமிருந்தும் அனைத்து நிகாபிகளிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்

    முதலில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நம் மதத்தைப் பற்றிய தவறான தகவல்களைத் தருவதை நிறுத்த வேண்டும் ..

    ReplyDelete
  2. . Br. Razick ஊடகங்களில் முகத்தை மூடுவது நபியின் மனைவிகளுக்கு மட்டுமே என்றும் மற்ற எல்லா பெண்களுக்கும் அது ஹராம் என்றும் கூறினார்!
    அவர் உண்மையில் அனைத்து முஸ்லீம் பெண்களுக்கும் துரோகம் இழைத்தார், மேலும் அனைத்து முஸ்லிமல்லாதவர்களும் இந்த தவறான அறிக்கையை பயன்படுத்திக் கொண்டனர்.
    அவர் அல்லாஹ்விடமிருந்தும் அனைத்து நிகாபிகளிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்

    முதலில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நம் மதத்தைப் பற்றிய தவறான தகவல்களைத் தருவதை நிறுத்த வேண்டும் ..

    ReplyDelete
  3. National anthem is with out music is it correct?

    ReplyDelete
  4. இஸ்லாத்திலே கருத்து முரண்பாடான பல விடயங்கள் உள்ளன.சஹாபாக்கள் காலத்தில் இருந்தே இந்த கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெற்று வந்துள்ளன.ஆனால் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு அவைகளை அவர்கள் ஒற்றுமையாக சகிர்த்து வாழ்ந்து வழிகாட்டி இருக்கின்றார்கள்.ஆனால் நாம் இன்று அவ்வாறான கருத்து வேற்றுமைகளை விவாத மேடையாக்கி பல பிரிவுகளையும் அமைப்புகளையும் தோற்றுவித்து அன்னியர்கள் மத்தியிலே காட்டிக் கொடுப்பு களை ஏற்படுத்தி அவர்களுக்கு எம்மைப்பற்றி யும் எமது மார்க்கத்தை பற்றியும் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தும் செயற்பாடுகளை எமது அன்றாட நடை உடை பாவனைகள் மூலமாக கூட நாம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.இஸ்லாம் அகன்று விரிந்த ஒரு அறிவுக்கடல் அரபு மொழியிலே அருளப்பட்ட புனித திருக்குர்ஆன்,நபி மொழி போன்றவற்றிக்கு அரபு மொழியில் பாண்டித்தியம் பெற்ற அறிஞர் பெருமக்கள் கூட சொல்லுக்கு சொல் பல வியாக்கியானங்களை வெளிப்படித்தி யுள்ளார்கள். தத்தமது அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப அகீதாவுக்கு உட்பட்டு அவைகளை விளங்க பாமர மக்களுக்கூட முடியும் என்பதுதான் இஸ்லாம் மார்க்கத்தின் தனிச்சிறப்பு.அதை விடுத்து கூட்டம் போட்டு இயக்கம் உண்டாக்கி அதற்கு பெயர் வைத்து நாங்கள் சொல்வதுதான் ,நடப்பதுதான் இஸ்லாம் என மார்பு தட்டும் ஆசாமிகளால்தான் எமக்கு இவ்வள பிரச்சினைகள் என்பதையும்,ஏனைய சமூகங்களும் வாழ்கின்ற இந்த நாட்டில் அரசுக்கு கட்டுப்பட்டு அவர்களுக்கு அச்சத்தையும் அவ நம்பிக்கைகளையும் ஏற்படுத்தாத முறையில் எமது வாழ்கையை அமைத்துஎமதுமார்க்கத்தில் சர்ச்சைக்குரிய விடயங்களில் விவாதிப்பது,விரண்டா வாதங்களை பரிந்து போன்றவைகளை தவிர்த்து வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வாழ்வோமாக.இஸ்லாத்தில் இசையும் ஒரு சர்ச்சைக்குரிய சமாச்சாரம் தான் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

    ReplyDelete

Powered by Blogger.