Header Ads



30 குழந்தைகளை விற்றவனுக்கு பிணை வழங்கப்பட்டது - மொரட்டுவ நீதிமன்றத்தினால் விசித்திரத் தீர்ப்பு


புதிதாகப் பிறந்த 30 குழந்தைகளை விற்றதாகக் கூறப் படும் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த சந்தேக நபருக்கு மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தினால் இன்று -23- பிணை வழங்கப் பட்டுள்ளது.

புதிதாகப் பிறந்த 30 குழந்தைகளைப் பணத்திற்காக விற் றார் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்டகுறித்த நபர் சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணை களில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி மீண்டும் மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.