கால்பந்து ஜாம்பவான் மாரோடோன, மாரடைப்பினால் தீடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்
அர்ஜெண்டினாவை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் மாரோடோன தீடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜெண்டினாவை சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரர் மாரோடோனா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
அவரது மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது அவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கால்பந்து உலகின் ஜாம்பவான் ஆன மாரோடோனா கடந்த 1986-ஆம் ஆண்டு அர்ஜெண்டினா உலகக்கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் சோகமாக தங்கள் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
Post a Comment