Header Ads



கொரோனா இருப்பதை அறியாமலேயே சிலர் உயிரிழந்துள்ளனர் - கரு


கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை அறியாமலேயே துரதிர்ஷ்டவசமாக சிலர் உயிரிழந் துள்ளார்கள் என முன்னாள் சபா நாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி யிருப்பதை அறியாமலேயே சமூகத்தில் இருப்பவர்களை விரைவாக இனங் காண வேண்டிய தேவையுள்ளது என கரு தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

தமக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை அறியாமலேயே துரதிர்ஷ்டவசமாக சிலர் உயிரிழந் திருக் கிறார்கள்.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதை விரைவாக இனங்கண்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய பலர் சமூகத்தில் இருப்பதற்கான வாய்ப் புள்ளது.

எனவே, தாம் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதை அறியாத ஒருவர் அதை ஏனையவர்களுக்குப் பரப்பு வதிலிருந்து எவ்வாறு விலகியிருக்க முடியும்?

அதேபோன்று மரக்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட் களை மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதில் அனர்த்த முகா மைத்துவ அடிப்படையிலான முறையான செயற் திட்ட மொன்றை அரசாங்கம் பின்பற்றுவது அவசியமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.