9 மரணங்களும் நேற்று, ஒரேநாளில் பதிவாகவில்லை - இராணுவத் தளபதி
சுகாதரார சேவை பணிப்பாளரால் நேற்று (21) அறிக்கையிடப்பட்ட 9 கொரோனா மரணங்களும் நேற்றைய தினத்தில் மாத்திரம் பதிவாகவில்லை என, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த மரணங்களில் நேற்றைய தினம் 4 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனரெனவும் ஏனைய 5 பேரும் 2 நாள்களுக்கு முன்னர் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று -22- காலை தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த மரணங்களின் மரண விசாரணை அறிக்கை கிடைத்ததும் அனைத்தும் ஒன்றாக ஒரே நாளில் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அறிக்கைகளை மறுப்பு தெரிவிப்பதை விடுத்து நீங்களே முன்கூட்டி அறிக்கை விட பழகிக்கொள்ள வேண்டும்.
ReplyDelete