றிசாத் பதியுதீனை கைதுசெய்ய, பிடியானை பிறப்பிக்க முடியாது - நீதிமன்றம் மறுப்பு
- Anzir -
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய நீதிமன்றத்தின் ஊடாக பிடியானை ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்
இன்று செவ்வாய்கிழமை (13) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இதுபற்றி சட்டமா அதிபர் சார்பில் கோரிக்கை மனு முன்வைக்கப்பட்டது.
எனினும் றிசாத் பதியுதீனை கைதுசெய்ய பிடியானை பிறப்பிக்க முடியாது என நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஷிராஸ் நூர்தீன் மற்றும் உத்துல் பிரேம உள்ளிட்டவர்கள் இதன்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment