றிசாத் தலைமறைவு - கைதாவதை தடுக்க நீதிமன்றத்தை நாடுகிறார்
முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனை கைது செய்வதற்காக அவரது மன்னார் மற்றும் கொழும்பு வீடுகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவரை கைது செய்ய 6 பொலிஸ் குழுக்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் றிசாத் தற்போது தலைமறைவாகி உள்ளார்.
அவர் இன்று அல்லது நாளை தன்னை கைது செய்வதை தடுப்பதற்கான மனுவை நீதிமன்றில் தாக்கல் செய்யலாமென சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Post a Comment