பொதுமக்கள் வருகை தருவதற்கு, மீள் அறிவித்தல் வரை தடை
கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவிவருவதையிட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் சில மட்டுப்பாடுகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கமைய, பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதிகளுக்கு பயணிகள் பிரவேசிப்பதற்கு, நேற்று (04) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விமான நிலையத்தில் அமைந்துள்ள பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் பகுதிகளுக்கு, பயணிகளுடன் விருந்தினர்கள் பிரவேசிக்கவும்,பொதுமக்கள் வருகை தருவதற்கும் மீள் அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
Post a Comment