Header Ads



கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு தொடரும் - திங்கட்கிழமை அத்தியாவசிய பொருள் வாங்க அனுமதி

நீர்கொழும்பில் மேலும் 6 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நீர்கொழும்பின் ராஜபகஷ ப்ரோட்வே (Rajapakse Broadway), என்டேசன் மாவத்தை, செத்தப்பாடுவ, பிட்டிபன, தலுவகொட்டுவ பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று நீர்கொழும்பு சுகாதார பரிசோதனை அதிகாரி குணரத்ன அவர்கள் தெரிவிக்கின்றார்.


இரண்டாவது கொரோனா கொத்தணி பரவலில் நீர்கொழும்பில் இதுவரையில் 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


மேலும், கம்பஹா மாவட்டத்தில் மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு தொடரும் என அறிவிப்பு. நாளை (திங்கள்) காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அத்தியாவசிய பொருட் கொள்வனவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.