Header Ads



இலங்கை இராணுவத்தினருக்காகவும், நாட்டுக்காகவும் துஆப் பிராத்தனை - சவேந்திர சில்வாவும் பங்கேற்பு


இலங்கை இரானுவத்தின் 71வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இரானுவத்தின் முஸ்லிம் ஊழியா்களின் அனுசரனையில் இஸ்லாமிய நிகழ்வுகள் சனிக்கிழமை 03.10.2020 கொள்ளுப்பிட்டி ஜம்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது. எதிா்வரும் 10 ஆம் திகதி இரானுவத்தின் 71 வது நிகழ்வுகள் காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளன. அதனை முன்னிட்டு சகல மத நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில் இன்று இஸ்லாமிய தின நிகழ்வுகள் நடைபெற்றது.

இன்றைய நிகழ்வுக்கு இரானுவத்தளபதி லெப்டிணன்ட் ஜெனரல் சர்வர்னந்தா சில்வா மற்றும்  இரானுவ முஸ்லிம் ஊழியா்கள்  தலைவா் பிடிகேடியா் அஸ்கா் முத்தலிப்  மற்றும், உயா் அதிகாரிகளும் கலந்து கொண்டனா். அத்துடன் மொளலவி ஏ.பி.எம். றிஸ்வான் அவா்களால் துஆப் பிராத்தனையுடன் ஆரம்பிக்க்பபட்டது.  அத்துடன் மௌலவி அக்மா ஹலால்டீனால் இரானுவத்தின்ருக்கும் நாட்டுக்கும் துஆப் பிராத்தனையும் இடம்பெற்றது.

அத்துடன் அல்குர் ஆன் மொழிபெயா்ப்பு இரானுவத்தளபதிக்கு பள்ளிவாசல் நிர்வாகத்தின் தலைவா் முகமட் மற்றும் முஸ்லிம் சலாகுடீன், செயலாளா் சாஹூல் ஹமீத் ஆகியோா்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

(Ashraff.A.Samad)





No comments

Powered by Blogger.