Header Ads



தனிமைப்படுத்தல் நடைமுறையில் இன்றுமுதல் மாற்றம்


கொவிட் -19 தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய முதல் நிலை தொடர்பாளர்கள் இன்று -26- முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார். 


இந்நாட்டில் இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்கள் 7872 பேரில் 3923 பேர் நாடடின் 32 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு குறிப்பிட்டுள்ளது. 


அதற்கு மேலதிகமாக கொவிட் அறிகுறிகளுடன் 527 பேர் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் வைத்திய கண்காணிப்பின் கீழ் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.