442 மில்லியன் ரூபா நஷ்டஈட்டுத் தொகையை, இலங்கைக்கு செலுத்திய நியூ டயமண்ட் கப்பல் உரிமையாளர்கள்
எம்டி நியூ டயமண்ட் எண்ணெய்க் கப்பலின் உரிமையாளர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு 442 மில்லியன் ரூபா நஷ்ட ஈட்டுத் தொகையை செலுத்தியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
எம்டி நியூ டயமண்ட் என்ற கப்பலானது இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் செப்டெம்பர் 03 ஆம் திகதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது.
இதனால் இலங்கை கடற்படையினர் இந்தியாவின் உதவியுடனும் குறித்த கப்பலின் தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனையடுத்து தீ விபத்தினை கட்டுப்படுத்தியமை மற்றும் அதனால் உண்டான கடல் சுற்றாடல் மாசுபாடு காரணமாக இலங்கை சார்பில் சட்டமா அதிபர் திணைக்களமும், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையும் 442 மில்லியன் ரூபா நஷ்ட் ஈட்டுக் கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
இந்தப் பெரும் தொகை பணம் யார் யாருக்கு பங்கு வைக்கப்படும் என்று தெரியாது
ReplyDeleteஇந்தப் பெரும் தொகை பணம் யார் யாருக்கு பங்கு வைக்கப்படும் என்று தெரியாது
ReplyDelete