Header Ads



கம்பஹாவில் மேலும் 3 பகுதிகளுக்கு பூட்டு -


கம்பஹா மாவட்டத்தில் உள்ள மாலிக்கா தென, எலுவாபிட்டிய மற்றும் ஹிக்கடுவ ஆகிய பகுதிகள் பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றாளர்கள் 37 பேர் அடையாளம் காணப்பட்டதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கம்பஹா மாவட்டச் செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்தார்.


அதன் படி குறித்த மூன்று கிராம சேவகர் பிரிவிற்குப்பட்டவர்கள் 7 ஆவது கிராம சேவகர் பிரிவிற்கு உட்பிரவேசிக்கவோ வெளியேறவோ முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்றாளர்களில் நான்கு துறவிகள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.


இதற்கிடையில், கம்பஹா பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய் யப்பட்டுள்ளது.


இந்நிலையில், மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணி யாற்றிய ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட நபரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.


அத்துடன் , குறித்த வைத்தியசாலையில் 7 பேர் தனிமைப்படுத்தலுக்குட் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தற்போது 70 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனைக்குட்படுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.