Header Ads



20 ஆவது திருத்தம் தொடர்பில், கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் அறிவிப்பு


அரசமைப்பின் 20ஆவது திருத்தத்​தை  முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ள, கத்தோலிக்க ஆயர்கள் பேரவை,   புதிய அரசமைப்பை தயாரிப்பதற்கு  இந்த சந்தர்ப்பத்துக்கு முக்கியதுவம் அளிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.


அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கத்தோலிக்க ஆயர்கள் பேரவை மக்கள்  இறைமை அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன், 20 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில்  முன்வைப்பதற்கு  முன்னர், அதனை விரிவாக ஆராய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.


நாடாளுமன்றத்தில் பெறும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஊடாக, மக்களின் உண்மையான விருப்பத்தை பிரதிபலிக்கவில்லை என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.