Header Ads



ISIS பற்றி நான் சொன்னதை கவனத்தில் எடுத்திருந்தால், நல்லாட்சி அரசு கவிழ்ந்திருக்காது


இலங்கையர்கள் சிலர் ஐ எஸ் அமைப்புடன் இணைந்துக்கொள்ளவுள்ளனர் என தன்னால் நாடாளுமன்றில் ஆற்றப்பட்ட உரையினை நல்லாட்சி அரசாங்கம் கவனத்தில் எடுத்திருந்தால் குறித்த அரசாங்கம் ஆட்சியிலிருந்து கவிழ்ந்திருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜெதாச ராஜபக்ச தெரிவித்தார்.


உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.


அத்துடன் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலின் போது ஆட்சியிலிருந்த அரசாங்கமே அதற்கு பொறுப்பு கூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 


No comments

Powered by Blogger.