Header Ads



மைத்திரி - ரணில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட, இருவருக்குமிடையிலான கருத்துவேறுபாடே காரணம்



19 வது திருத்தத்தை அகற்றிவிட்டு 18வது திருத்தத்தை மீண்டும் கொண்டுவருவதை ஏற்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.


இந்த விடயம் தொடர்பில் நாட்டில் போதியளவு கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


முன்னைய அரசாங்கம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டமைக்கு 19 வது திருத்தம் காரணமில்லை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான கருத்துவேறுபாடே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

19வது திருத்த்திலிருந்து பின்னோக்கி செல்வது ஒரு தீர்வாக அமையாது என அவர் தெரிவித்துள்ளார்.


19வது திருத்தத்தில் உள்ள தவறுகளை சரிசெய்துகொண்டு அதனை தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் என ஹிருணிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.