இலங்கையில் பிளாஸ்டிக் முட்டை, செயற்கை முட்டைகளைப் பயன்படுத்தி உணவுகளைத் தயாரித்தது அம்பலம்
வவுனியாவில் உள்ள ஒரு உணவகத்தில் பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்ட செயற்கை முட்டைகளைப் பயன்படுத்தி உணவுகளைத் தயாரித்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த உணவகத்தில் பி.எச்.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த ஹோட்டலில் இருந்து முட்டை ரோல்களை வாங்கிய ஒரு வாடிக்கையாளர் அதன் சுவை குறித்து புகார் கொடுத்தார்.
ஆனால் கடை உரிமையாளர் அதை மறுத்தார். இந்த நிலையில் வாடிக்கையாளர் வவுனியா நகர சபையின் பி.எச்.ஐ.க்கு புகார் அளித்தார்.
இதையடுத்து உடனடியாக விரைந்த அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் செயற்கை முட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
முட்டைகளின் அதிக விலை காரணமாக உணவு விடுதி உரிமையாளர் இதைச் செய்ததாக அவர்கள் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து பி.எச்.ஐ அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
சட்ட நடவடிக்கையின் பின் இந்த முட்டை எப்படி செய்தார்கள் என்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பார்கள்.
ReplyDeleteஅப்போது பிளஸிட்க் முட்டைகளை எப்படி செய்யலாம் என்பதை மக்கள் அறிந்து கொள்வர்.
Well said bro
ReplyDelete