உள்ளுரில் நடைபெறும் கிரிக்கெட், போட்டிகளிலும் ஆட்ட நிர்ணயம் - மஹிந்தானந்த
உள்ளுரில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளிலும் ஆட்டநிர்ணயம் இடம்பெற்று வருவதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும், தற்போதைய கமத்தொழில் அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே மீளவும் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
ஊடகமொன்றுக்கு நேற்று இரவு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டிருக்கின்றார்.
உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின்போது இலங்கை அணி ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டதாக முன்னதாக அவர் வெளியிட்ட தகவல் தேர்தல் காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு முன் கூறியதுபோல மும்பையில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வீரர்கள் சதியில் ஈடுபடவில்லை என்றும் ஆனால் விசாரணைக்கு அவர்களே அழைக்கப்பட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இரண்டே வாரங்களில் விசாரணைகள் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட அவர், விசாரணைகள் அவசியம் என்றும் தெரிவித்தார்.
A To Z all of you ALIBABA.
ReplyDeleteYOUR NOT CLEAN FOR EVER.
DONT TRY TO SMART
தவளை தன்வாயாலே கெடும்...
ReplyDelete