2025ஆம் ஆண்டு தேர்தலில், நிலைமை தலைகீழாக மாறலாம் - விதுர விக்ரமநாயக்க
அரசியல்வாதிகள் தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுவதன் காரணமாகவே நாடு தற்போது மிகவும் பின்நோக்கி சென்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹொரணையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், அரசியல்வாதிகள் என்ற வகையில் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் இருக்க முடியாது.
அவ்வாறான தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் இருக்குமாயின் அது வீழ்ச்சி. தற்போதைய அரசாங்கம் சரியாக செயற்படாமல் போனால், அடுத்த தேர்தலில் மக்கள் மிக மோசமான முடிவை வழங்கக்கூடும்.
2020ஆம் ஆண்டு வெற்றிக்கொண்ட வெற்றியானது 2025ஆம் ஆண்டு தேர்தலில் தலைகீழாக மாறும் சந்தர்ப்பம் உள்ளது.
2010ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட வெற்றி 2015ஆம் ஆண்டில் தலைகீழாக மாறியது. 2015ஆம் ஆண்டு பெற்றுக் கொண்ட வெற்றியும் 2020ஆம் ஆண்டில் தலைக்கீழாக மாறியது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment