Header Ads



தோல்வியடைந்த அரசியல்வாதிகள், பதவிகள் கேட்டு நச்சரிப்பு

இம் முறை பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தோல்வி யடைந்த பல அரசியல்வாதிகள் பதவிகளை கேட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமரை சந்தித்து மக்களுக்கு சேவை செய்ய ஒரு பதவி இல்லாமல் கடினமாக உள்ளதாக அரசியல்வாதிகள் தங்கள் குறைகளைத் தெரிவித் துள்ளனர்.

அத்துடன், பதவிகள் தேவைப்பட்டால், ஜனாதிபதி கோத் தாபய ராஜபக்ஷவை சந்தித்து பெற்றுக் கொள்ளுங்கள் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பிரதமரை சந்தித்து பதவிக்கு விண்ணப் பித்த எவரும் ஜனாதிபதியை சந்தித்து இதுவரை அந்த பதவிக்கான கோரிக்கை முன்வைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.