Header Ads



சபாநாயகர், பிரதி சபாநாயகரை தெரிவுச் செய்யும் திகதி


ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அந்த வர்த்தமானி அறிவித்தலில் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 9.30 க்கு பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கும் என குறிப்பிடபட்டுள்ளது. 

அரசியலமைப்பின் 70 ஆவது சரத்துக்கமைய ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 

அவ்வாறு கூடும் பாராளுமன்ற அமர்வின் முதலில் சபாநாயகர், பிரதி சபாநாயகர், பிரதி தெரிவுக் குழு மற்றும் தவிசாளர் ஆகியோர் தெரிவுச் செய்யப்படவுள்ளனர். 

அதன் பின்னர் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் சத்தியப்பிரமானம் மற்றும் வாக்குறுதிகளை வழங்கவுள்ளனர்.

No comments

Powered by Blogger.