மெளலவி அலியார் பிணையில் விடுதலை
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவருமான மௌலவி ஏ.எம்.அலியார் றியாதி நேற்றைய -10- தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 10.05.2019 அன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவரை நேற்றைய தினம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.சி.றிஸ்வான் பிணையில் விடுதலை செய்தார்.
ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையிலும் 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும் இவர் விடுதலை செய்யப்பட்டதுடன் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீதிமன்றத்துக்கு உரிய திகதியில் சமுகமளிக்க வேண்டுமெனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அடுத்த வழக்கு 19.07.2019 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக் கல்லூரியின் தலைவரும் காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவரும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.எம்.அலியார் றியாதி 10.05.2019 அன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.
இந்த நிலையில் இவருக்கு பிணை கோரி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் 10.07.2019 நேற்று புதன்கிழமை முன்வைக்கப்பட்ட பிணை மனுவினை விசாரணை செய்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான், சட்டமா அதிபரின் அங்கீகாரத்துடன் மேற்படி நிபந்தனைகளுடன் பிணையில் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
Alhamthulillah Allah will give good health and long life to him
ReplyDeleteYAHUDI NASARAKKALIN PANATHUKKU,
ReplyDeleteAATAAM PODUHINRA ALIARAAAAA.?
Halo Imthiyas don't blame baseless? he is genuine and clean hand, did all well for humanity...
ReplyDelete