Header Ads



இரக்கம் கொன்ட, இஸ்லாமியனாய் பேசுகிறேன்...!


இனி இங்கே
பாவங்கள் தான் ஆழுமா ????
மனிதம் 
வீழுமா ???

இஸ்லாமியனாய் பேச வரவில்லை -
இரத்தமும் சதையும் கலந்த
சக மனிதனாய்......!

சாவு வரும்
யாருக்கும் தெரியாது
எப்போது .?
எதர்க்காகச் சாகின்றோம்
யாருக்கும் தெரியாது
இப்போது !

இயேசுவின் சிஷ்யர்களே !
உங்கள்
ஆத்மாக்கள் சாந்தி
அடையட்டும் !

எனது பள்ளியாகட்டும் ..
உனது ஆலயமாகட்டும் .
எங்கு இறந்தாலும்
உயிரின் மதிப்பு ஒன்று தான் 
எங்கு ஓட்டப்பட்டாலும்
குருதி நெடி குமட்டல் தான் !

யுத்தம் வேண்டாமென
புத்தன்
வந்தொதுங்கிய பூமி
ரத்தத்தில் நனைகிறதே !
குண்டுச் சத்தத்தில்
உயிர் உரைகிறதே!

நானும் , நீயும்
பிறந்து வளர்ந்த பூமி இது!
உனது இரத்தம்
எனக்கு ஹராமென்றிருக்க -
குன்டு வைத்துச் சிதைப் பேனா
உன்னை ??????

இரக்கம் கொன்ட
இஸ்லாமியனாய் பேசுகிறேன் -
முகங் கண்டிரா உங்களுக்காய்
என் 
உள்ளம் அழுகிறது !


உங்கள்
மதக் கோட்பாடுகளை
சாவடிப்பதில் கூட எமக்கு
சம்மதமில்லை -
உங்களையா  சாவடிப்போம் ??

இயேசு 
உயிர்த்தெழுந்த நாளிலா
நீங்கள்
மரணிக்க வேண்டும் !???



என் சிலுவைத்தோழர்களே ! ஒன்றை
புரிந்து கொள்ளுங்கள்

மதத் தலங்களை இடிப்பதும் ,
தற்கொலையும்
இஸ்லாத்தில் இல்லை !
தற்கொலை குண்டுதாரி
அவன் உடம்பில்
பச்சை குத்தி இருக்கிறானாம்
அராபி மொழியில் . . ...

tatoo -   
அது காட்டவில்லையா ?
அவன்
இஸ்லாமியன் இல்லை .

உனதாலயத்தில்
கிழவனையும் , பிஞ்சுகளையும்
கொன்று குவிக்க
வென்று விடுமா?
இஸ்லாம்  .......
வெட்கித் தலை குனியும் !

எங்களை
மன்னித்தருள்வாயாக
ஏக இறைவா 

இஸ்லாத்தை
சிலுவையில் அறைந்து விட்டார்கள்
எங்களில் சில
யூதாஸ்கள் !
    oooo

 கம்மல்துறை
 எம்மெல் .ஷரான்

5 comments:

  1. இயேஸு மரணிக்கவே இல்லை
    உயிர்த்து எழும்புவதற்கு.....

    ReplyDelete
  2. படு பாதகர்கல் செய்த அயோக்கியத்தனத்துக்கு ஒரு Muslim மாக மன்னிப்புக் கேட்கிறேன்.ஆனால் மன்னிக்க முடியாத நாசகாரச் செயல்

    ReplyDelete
  3. Pray all the suiciders to go onto hell fire. All remaining accomplices of this henious crime must be hanged.
    ACJU must encourage the government to enforce death penalty forthwith.
    Hanging all these criminals giving mind contentment for all innocent souls.

    ReplyDelete
  4. unknown - your believe is Jesus is not died. However, Christians believe and the truth is Jesus died for the sinners and rose up on 3rd day. Please do not hurt Christians further more with your comments. Please note that one of the terrorist has written a letter to her mother before his brutal suicide bombing, he is doing this because of his Islamic religion. I believe you will understand it.

    ReplyDelete

Powered by Blogger.