நாம ஒன்னு நினைச்சா,, ரப்பு ஒன்னு நினைக்கிறான்...
உண்டியல் [வாளி] அருகே வந்தவுடன்..
ஒரு பத்து ரூபாய் எடுத்துப் போட்டேன்,
அதைப் பலர் பார்க்கும் படி பெருமிதமாக,
இனி நான் கஞ்சனல்ல,,இறைவனுக்காக
பழயதாக இருந்தாலும் ஒரு தர்மம்,
ஆனால்.... அது சற்று கிழிந்து இருந்தது.. வெளியில் யாரிடமாவது கொடுத்தால் வாங்காத அளவில் அழுக்காய் இருந்தது.
சரி.... விடு....
இறைவன் தானே அவனிடம் செல்லாதது ஏதேனும் உண்டோ....??
வரும் பணம் எல்லாம் அவன் பணிக்குத்தானே செல்ல வேண்டும் என்று ...
துஆ, துவங்கும் வேளை. சில வினாடிகளில் பின்னாளில் இருந்து எனது தோளை தொட்டு ஒருவர்.... 2000 ஆயிரம் ரூபாய் நோட்டை என்னிடம் கொடுத்தார்...
அவருக்கு, வசூலிக்கும் மோதினார் தூரமாக இருக்கவே சரி,என்று நான் அதை வாங்கி மோதினாரிடம் எட்டி
கொடுக்கச் செய்தேன்,
சே.... எவ்வளவு பக்தி இவருக்கு என்று வியந்தேன்..
பின்னர் ஜூம்மாவை முடித்துவிட்டு
சந்தோசமாக, வெளியே வந்தால்...
அவரும் அருகே நடக்க அவரிடம்..
பாய் நீங்கள் உண்மையிலேயே....
கிரேட் என்றேன்..
அவர் புரியாமல் எதுக்கு என்றார்...
இறைவனுக்காக உண்டியலில் ரூ 2000 போடுகிறீர்களே.... எவ்வளவு பக்தி உங்களுக்கு என்றேன்.. நான்..
நானா..???? இல்லங்க.. பாய்.. ???
பாய் நீங்க காசு எடுக்கும் பொழுது உங்கள் பாக்கெட்டில் இருந்து....
அந்த 2000 ரூபாய் நோட்டு விழுந்தது..
அதைத்தான் நான் எடுத்து உங்களுக்கு கொடுத்தேன்..
அதை வாங்கி உண்டியலில் போட்ட நீங்கள்தான்.... உன்னதமான கிரேட் மேன்.. என்றார்....
டமார்னு ஒரு சத்தம்....
(வேற என்ன நெஞ்சு தான்)
இதுதான் இறைவனின் விளையாட்டு ...!!!😄😄😄😄😄😄😄😄😄😄
அல்லாஹ் போதுமானவன் ☝
அல்லாஹுஅக்பர்
ReplyDelete