Header Ads



வெலிக்கடை கைதிகளின் கவனத்திற்கு...!

கைத்தொலைபேசிகள் மற்றும் தொலைபேசி இணைப்புகளை (sim) தம்வசம் வைத்திருக்கும் கைதிகள் அவற்றை உடனடியாக சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு வெலிக்கடை சிறைச்சாலையில் அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலைக்குள் கைதிகள் அடிக்கடி நடமாடும் பிரதேசங்களில் இந்த அறிவித்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சிறைக்கூடங்களுக்குள் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு முன்பதாக  கைத்தொலைபேசிகள் மற்றும் தொலைபேசி இணைப்புகளை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் கைதிகளுக்கு மன்னிப்பு அளிக்கப்படுமெனவும், அவ்வாறு கையளிக்காத கைதிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைத்தொலைபேசிகள் மற்றும் தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தும் கைதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீதியமைச்சு ஏற்கனவே அறிவித்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Yeah, The Prisoners are frequent visitors to this site, they'll take to their count...

    ReplyDelete

Powered by Blogger.