முஸ்லிம் பிரச்சினைகளுக்கு தீர்வுகிட்ட, இலங்கை அரசுக்கு அழுத்தம் பிரயோகிக்கமாட்டோம் - அல்துர்க்கி
-விடிவெள்ளி ARA.Fareel-
இலங்கையில் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொள்வதற்காக உலக முஸ்லிம் லீக் இந்நாட்டின் ஜனாதிபதிக்கோ அரசுக்கோ அழுத்தங்களைப் பிரயோகிக்காது. ஆனால் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக எமது ஆலோசனைகளை வழங்க முடியும் என அவ்வமைப்பின் செயலாளர் நாயகம் கலாநிதி அப்துல்லாபின் அல்முஹ்ஸின் அல்துர்க்கி தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை முஸ்லிம்கள் ஏனைய மதத்தவர்களுடன் முரண்பட்டுக் கொள்ளாது சமாதானமாக சகவாழ்வோடு வாழவேண்டும். இது எமது கடமையாகும். ஏனைய மதத்தவர்களுடன் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்பதே இஸ்லாமிய கோட்பாடாகும் என இன்று இலங்கையில் ஆரம்பமாகவுள்ள உலக முஸ்லிம் லீக்கின் இருநாள் மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை வந்துள்ள உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள இஸ்லாமிய நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் பதிலளிக்கையில்,
இலங்கையின் பல்லின சமூகங்களுக்கிடையில் எதுவித முரண்பாடுகளும் உருவாகக்கூடாது என்பதே உலகமுஸ்லிம் லீக்கின் எதிர்பார்ப்பாகும். உலக முஸ்லிம் லீக் இலங்கையின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
கேள்வி: இலங்கையில் முஸ்லிம்களுக்குப் பல பிரச்சினைகள் உள்ளன. சவால்கள் உள்ளன. முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொள்வதற்காக உலக முஸ்லிம் லீக் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்குமா?
பதில் : உலக முஸ்லிம் லீக்கினால் இந்நாட்டின் ஜனாதிபதிக்கோ அரசுக்கோ அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது. அழுத்தங்கள் பிரயோகிக்க எமக்கு அதிகாரமில்லை.ஆனால் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக எமது ஆலோசனைகளை வழங்க முடியும். நாம் எமது ஆலோசனைகளை வழங்குவோம்.
கேள்வி: நடைபெறவுள்ள உலக முஸ்லிம் லீக்கின் மாநாட்டில் இலங்கை தொடர்பில் என்ன திட்டங்களை முன்னெடுக்கவுள்ளீர்கள்?
பதில்: நாம் அமுல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பில் இரு நாடுகளும் சேர்ந்து தீர்மானம் எடுப்போம்.இருநாடுகளும் சேர்ந்து குழுவொன்றினை நியமித்து அக்குழு என்ன திட்டங்களை மேற்கொள்வது என்பது பற்றி தீர்மானங்களை மேற்கொள்ளும். உலக முஸ்லிம் லீக் தேவையான ஆலோசனைகளை வழங்கும்.
கேள்வி: இலங்கைக்கு வழங்கப்படும் ஹஜ் கோட்டாவை அதிகரித்துப் பெற்றுக் கொள்வதற்கு உலக முஸ்லிம் லீக் உதவிபுரியுமா?
பதில்: ஹஜ் ஏற்பாடுகளுக்கென சவூதி அரேபியாவில் தனியான ஓர் அமைச்சு இருக்கிறது. இந்த அமைச்சின் பொறுப்பிலே அனைத்துக் கடமைகளும் இயங்குகின்றன. அதனால் இவ்விவகாரத்தில் எம்மால் தலையிட முடியாது. எம்மால் சிபார்சுகளை மாத்திரம் செய்யலாம். ஹஜ் அமைச்சே தீர்மானங்களை மேற்கொள்ளும்.
கேள்வி: இலங்கையில் முஸ்லிம்களுக்கென்று தனியாக காதி நீதிமன்றங்கள் இயங்கிவருகின்றன. காதி நீதிபதிகளுக்கு ஷரீஆ தொடர்பான பயிற்சிகளை சவூதியில் ஏற்பாடு செய்ய முடியுமா?
பதில்: அதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்படவேண்டும். சவூதி தூதரகம் ஊடாக அல்லது இலங்கையிலுள்ள இஸ்லாமிய நிலையத்தின் ஊடாக இந்தக் கோரிக்கைகளை முன்வைக்கலாம். அதற்கான ஏற்பாடுகளை எங்களால் முன்னெடுக்க முடியும்.
கேள்வி : இலங்கையில் வக்பு சட்டம் அமுலிலுள்ளது. வக்பு சட்டம் தொடர்பில் உங்கள் கருத்தென்ன?
பதில் : வக்பு சட்டம் ஓர் முக்கிய சட்டமாகும். வக்பு சட்டத்தை இலங்கை முஸ்லிம்கள் மத்திரமல்ல, அனைத்து முஸ்லிம்களும் கட்டாயமாகப் பின்பற்றியாக வேண்டும்.
கேள்வி : வடக்கு, கிழக்கு யுத்தத்தில் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பல பெண்கள் விதவைகளாகியுள்ளார்கள். விதவைகளுக்கும் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் கல்விக்கும் உலக முஸ்லிம் லீக் உதவி செய்யுமா?
பதில்: இலங்கை முஸ்லிம்களுக்கு முஸ்லிம் லீக் மாத்திரமல்ல, பல நிறுவனங்கள் உதவி செய்துவருகின்றன. மதீனா பல்கலைக்கழகத்தில் அதிகமான இலங்கை மாணவர்கள் பயில்கிறார்கள். சவூதியில் 500 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இஸ்லாமிய பீடம் மhத்திரமல்ல மருத்துவம், விஞ்ஞானம், சமூகவியல்,பொறியியல் போன்ற பல பீடங்கள் இயங்கி வருகின்றன. ஆனால் இலங்கை முஸ்லிம்கள் இஸ்லாமிய பீடத்தை மாத்திரமே நாடுகின்றனர். ஆனால் முஸ்லிம்களுக்கு ஷரீஆ அறிவு அவசியமாகும். ஷரீஆவினை அடுத்தே அனைத்து கற்கைகளும் மேற்கொள்ளப்படவேண்டும். அதனாலேயே சவூதியில் இஸ்லாமிய கற்கைக்கு ஷரீஆ பீடத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. குர்ஆனும் சுன்னாவுமே மக்களை நல்வழி நடத்துகிறது.
கேள்வி: சவூதியிலும் பள்ளிவாசல்களில் குண்டுகள் வெடிக்கின்றனவே? ஏன் அங்கு புரிந்துணர்வு வளர்க்கப்படவில்லையா?
பதில்: சவூதியில் இவ்வாறான சம்பவங்களைக் கட்டுப்படுத்த நாம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கண்டுள்ளோம். சவூதியில் 100 சதவீத பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய அரபு நாடுகள் எம்மிடம் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகளைப் பெற்று வருகின்றன. பாதுகாப்பு சவூதியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கேள்வி: இலங்கைக்கும், சவூதி அரேபியாவுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு உலக முஸ்லிம் லீக் பங்களிப்புச் செய்கிறதா?
பதில்: இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுப்பாலமாக உள்ளது. உலக முஸ்லிம் லீக் இலங்கை மக்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் இவ் உறவு மேலும் வலுவடைந்துள்ளது. மற்றும் தூதரகங்கள் ஊடாகவும், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஊடாகவும் உறவுகள் பலப்பட்டுள்ளன.
கேள்வி: இலங்கை முஸ்லிம்களுக்கு என்ன கூறப்போகிறீர்கள்?
பதில்: இலங்கை முஸ்லிம்களாகிய நீங்கள் இரக்க சிந்தனையுள்ளவர்களாக இருங்கள். ஏனைய மதத்தவர்களுடன் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள் என்றார்.
மகாநாடுகளின் நடத்துவதின் மூலமகாகவும், உலக கல்வியில் முன்னேருவதாலும், 'சகவாழ்வு' என்று சொல்லக்கூடிய இஸ்லாத்துக்கு புறம்பான கோட்பாட்டை பின்பற்றுவதாலும், முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகிடைக்கும் என்று பகல்கனவு காண்பவர்களுக்கு இது ஒரு நல்ல பாடமாகும்.
ReplyDeleteஸஹாபாக்களும் எமது முன்னோர்களும் எதனூடாக கண்ணியம் அடைந்தார்களோ, அதனை விட்டுவிட்டு, வேறெந்த 'ஹிக்மத்தான' தீர்வைகொண்டும் எமக்கு கண்ணியம் கிடைக்காது.
முஸ்லிம்களின் கண்ணியம் மீண்டும் கிடைப்பதற்கு ஒரேயொரு வழி, ஜிஹாத் செய்வதாகும்.
பின்வரும் ஹதீஸை கவனியுங்கள்:
عَنْ ابْنِ عُمَرَ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ( إِذَا تَبَايَعْتُمْ بِالْعِينَةِ ، وَأَخَذْتُمْ أَذْنَابَ الْبَقَرِ ، وَرَضِيتُمْ بِالزَّرْعِ ، وَتَرَكْتُمْ الْجِهَادَ ، سَلَّطَ اللَّهُ عَلَيْكُمْ ذُلا لا يَنْزِعُهُ حَتَّى تَرْجِعُوا إِلَى دِينِكُمْ ، سَلَّطَ اللَّهُ عَلَيْكُمْ ذُلا لا يَنْزِعُهُ حَتَّى تَرْجِعُوا إِلَى دِينِكُمْ ، سَلَّطَ اللَّهُ عَلَيْكُمْ ذُلا لا يَنْزِعُهُ حَتَّى تَرْجِعُوا إِلَى دِينِكُمْ )
روى أبو داود (3462)
அல்லாஹ்விங் தூதர் கூறியதாக, இப்ன் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நீங்கள் ஈனா என்று சொல்லப்படக்கூடிய வியாபாரத்தில் (வட்டிக்கு வேறு பெயர்களை வைத்து செயற்படுதல்) ஈடுபடுவீர்களானால், கால்நடைகளின் வாளை பற்றிப்பிடித்துக்கொள்வீர்களானால், விவசாயத்தில் திருப்தி காண்பீர்களானால், இன்னும் ஜிஹாதை விட்டு விடுவீர்களானால், அல்லாஹ் உங்கள் மீது ஒரு இழிவை சாட்டுவான். நீங்கள் திரும்ப மார்க்கத்தில் நுழையும் வரை அவ்விழிவு அகற்றப்படாது. அல்லாஹ் உங்கள் மீது ஒரு இழிவை சாட்டுவான். நீங்கள் திரும்ப மார்க்கத்தில் நுழையும் வரை அவ்விழிவு அகற்றப்படாது. அல்லாஹ் உங்கள் மீது ஒரு இழிவை சாட்டுவான். நீங்கள் திரும்ப மார்க்கத்தில் நுழையும் வரை அவ்விழிவு அகற்றப்படாது." என்று கூறினார்கள். [அபூ தாவூத் 3462]
ஆக, யார் ஜிஹாதை விட்டுவிட்டு, வேறொரு தீர்வை முன்வைக்கிராரோ, அவர் தன்னை தானே ஏமாற்றிக்கொள்வதுடன், அவரை பின்பற்றுபவர்களையும் ஏமாற்றுகின்றார்.
இவர் ிலங்கையில் IS தொடங்க சொல்கிறார்.
Deleteநல்ல ஐடியா தான்
Sri Lanka Army is capable to destroy any threats to its country.
DeleteSri Lanka has already defeated Tamil terrorism.
Srilankavil ulla muslimkalukku periya ninaippu oru paruppum vekathudi mappu
ReplyDeleteMr sritharan ongada paruppa eallam adakki mudinji. So pothikottu iringa.
DeleteMr. Sritharan ongada paruupa eallam nalla aathi vechi irikiranga so pothilottu iringa..
ReplyDeleteIf this statement was told by the King of Saudi then sri lankan muslims have to worry and expect No any support from Arab muslims... But
ReplyDeleteThis Old Man just tour all countries wth the intention of deceive minority muslims showing as if he the King..
Shame on him..
SEND THIS OLD MAN BACK TO HIS COUNTRY...
Mr Sri neenga thinda paruppu pothum thane
ReplyDeleteஇலங்கையில் இருந்துகொண்டு எமது பௌத்த சகோதரர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது முட்டாள் தனமாகும். அதை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. ஒரு சில பேரினவாத சக்திகள் தமது அரசியல் நோக்கங்களுக்கு இனவாதத்தை தூண்டுகின்றன. ஆனால் கருணையையும் அன்பையுமே புத்தமதம் போதிக்கிறது, அதை பின்பற்றும் உணமையான பௌத்தர்கள் நாட்டில் நிறையவே உள்ளனர். அவர்கள் எமது தொப்புள் கொடி உறவுகள். எமது சகோதரர்கள்.
ReplyDeleteஜிஹாத் என்றல் ஆயுதம் தூக்குவது என்பது பிழையான கருத்தாகும். உண்மையில் மனிதன் தனது குணத்தையும் பண்புகளையும் பழக்கவழக்கங்களையும் தூய்மை படுத்துவதற்கு தனது மனோ இச்சையுடன் செய்யும் போராட்டமே பெரிய ஜிஹாதாகும். அன்பு செலுத்துவதும் அநியாயம் செய்தவனை மன்னித்து அவனுக்கு உபகாரம் செய்வதும் கூட ஜிஹாதே. இன்று உலகில் ஜிஹாது என சொல்லிக்கொண்டு இஸ்லாத்தின் பெயரில் செய்யப்படும் போர்கள் , யுத்தங்கள் உண்மையான ஜிஹாது அல்ல.
ReplyDeleteWe muslim never want anyones.pressure. we seek and suplicate to Allah. There is no pressure as forceful as Allahs pressure
ReplyDeleteI can see Hindu and Christian LTTE terrorists have come out to make some stupid unrelated comments here. Be Careful of these wolves. Haters, take care of your own society before preaching to others..
ReplyDeleteமுதலில் நீங்கள் இயக்கப்பிரிவிலிருந்தும் வழிகெட்ட கொள்கைகளில் இருந்தும் வெளியேறி அல்லாஹ்விடம் தவ்பாசெய்து உண்மை முஸ்லிமாக மாறுவதட்கு உங்கள் நிலைக்கு எதிராக நீங்களே ஜிஹாத் செய்து கொள்ளுங்கள்
ReplyDeleteDon't worry dear Muslims.... Some of these hate commentators see problems in their own society not solved and disgusted. Now they try to just poke into our issues. So don't get upset. Let them comment but in their heart is hatred and fear only
ReplyDelete