Header Ads



பயங்கரவாதத்திற்கு எதிராக இணையுங்கள் - எர்துகான் அழைப்பு


துருக்கி அதிபர் ரிசப் தாயிப் எர்துவான், தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான உலக நாடுகளின் போராட்டத்தில் இஸ்தான்புல் விமான நிலையத்தில் நடந்த தாக்குதல், ஒரு திருப்பு முனையாக அமைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

உலகில் உள்ள எந்த ஒரு விமான நிலையத்திலும் இம்மாதிரியான தாக்குதல் நடந்திருக்கலாம் ஆகையால் பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து அரசுகளும் கூட்டாக இணைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர், இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் மற்றும் நேடோ உறுப்பு நாடான துருக்கிக்கு ஆதரவு அளிப்பதில் அமெரிக்கா உறுதியாக நின்றது என தெரிவித்துள்ளார்.

ஐ.நா வின் பொதுச் செயலாளர் பான் கி மூன், தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன், இந்த தாக்குதல் ஒரு கொடூரச் செயல் என கூறியுள்ளார்.

6 comments:

  1. ISIS இன் மசகு எண்ணெய் துருக்கி ஊடக விற்பனை செய்யப்பட்டதாக செய்திகள் வந்த பொழுது எர்துஆன் என்ன செய்துகொண்டு இருந்தார்?

    ஒரு குறிப்பிட்ட மதப் பின்னணியில் இருந்துகொண்டு, "பயங்கரவாதம்" என்பதை எப்படி பகிரங்கமாக வரையறுக்கப் போகின்றார் இவர்?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  2. ஒரு குறிப்பிட்ட மத அடிப்படையில் இருந்து கொண்டு.... Rizvin அந்த குறிப்பிட்ட மதம் என்பது எல்லா இறை நம்பிக்கையாளர்களுக்கும் உண்டு. உங்களைப்போல் சுயலாபம் கருதி மத்ததை விட்டு சென்றவர்களைத்தவிர....
    சரி நீங்கள் இறந்தால் எந்த முறைப்படி உங்கள் இறுதிக்கிரியை நடத்த வேண்டும் என்று யோசித்துள்ளீர்கள்? நாத்திகர்கள் எவ்வாறு செய்வார்கள் ?

    ReplyDelete
  3. பதிவு பயங்கரவாதத்தைப் பற்றியது, உங்கள் கேள்வியோ என்னைப் பற்றியது, ஏனிந்த விடயத் தாவல்?
    நான் நாஸ்தீகன் என்று உங்களிடம் வந்து சொன்னேனா?

    ReplyDelete
    Replies
    1. ஓஹோ பயங்கரவாத்ததை பற்றி பேசினால். நீங்கள் அதை பற்றி மட்டும் தான் பேசுவீர்கள் போலும்.
      உங்களுக்கு Amnesia இருக்கின்றதா? தயுவு செய்து உங்கள் பழைய பதிவுகள் பார்க்கவும்.
      நாத்திகவாதிகளிடம் கேள்வி கேட்டால் பதில் கேளவிதான் வரும் பதில் வராது.

      Delete

Powered by Blogger.