Header Ads



கொழுப்பு டீ.எஸ். சேனாநாயக்கா கல்லூரியின், இப்தார் நிகழ்வு

கொழும்பு டீ.எஸ்.சேனாநாயக்கா கல்லூரியின் முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்திருந்த  இப்தார் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (24) டீ.எஸ்.சேனாநாயக்கா கல்லூரியின் உடற்பயிற்சி மண்டபத்தில் இடம் பெற்றது.

 இலங்கையில் இருக்கின்ற ஐக்கிய அரபு அமீர் ராச்சிய (துபாய்) தூதுவராயத்தின் அனுசரணையில், பாடசாலையின் முஸ்லிம் மஜ்லிஸ் பொறுப்பாசிரியர் எம்.ஐ.எம். பிர்தவ்ஸ் தலைமையில் நடைபெற்ற இவ் இப்தார் நிகழ்வில், இராஜாங்க அமைச்சர், ஏ.எச்.எம். பௌசி, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், பாடசாலையின் அதிபர் ஆர்.எம்.எம்.ரத்நாயக்க, தமிழ் பிரிவு தலைவர் நஸ்லிமா அமீன் மற்றும் பாடசாலையின் உதவி அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், முன்னாள் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வின் ஒரு பகுதியைப் படங்களில் காணலாம்.


1 comment:

Powered by Blogger.