Header Ads



பேராசிரியர் அப்துல்லாஹ் பெரியார்தாசன் வபாத்தானார்..!


(ஆளூர் ஷாநவாஸ்)

சேசாசலம் எனும் இயற்பெயர் கொண்ட பெரியார் தாசன் 1949 ஆகஸ்ட் 21 ஆம் நாள் சென்னை பெரம்பூரில், வீராசாமி - சாரதாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். எளிய குடும்பமும், ஏழ்மைச் சூழலும் சேசாசலமாக இருந்தவரை சாதனையாளராக உருமாற்றம் செய்தது. சென்னை பெரம்பூரிலுள்ள R .B .C .C .C பள்ளியில் தமது கல்விச் சிறகை விரித்த அவர், பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் வென்றார். பின்னர் அதே கல்லூரியிலேயே 1971 இல் பேராசிரியராகப் பணியில் சேர்ந்து பரிணமித்தார். 

சாதிக்க வேண்டும் என்றத் துடிப்பும், தனித்துவத்தோடு திமிறி எழ வேண்டும் என்ற வேட்கையும், அவரை மேலும் அதிகமாகப் போராடத் துரத்தியது. அதன் வெளிப்பாடாக லண்டன் ஆக்ஸ்போர்டு பலகலைக் கழகத்தில் மனோதத்துவத் துறையில் அவர் டாக்டர் பட்டம் பெற்றார். தம்மைச் சுற்றி நடக்கும் சாதிய இழிவுகளைக் கண்டித்தும், சமூகக் கொடுமைகளுக்கு எதிராகவும் அவர் ஆரத்தெழுந்தார். அதற்காக அவர் கையிலெடுத்த கருவிகள் தான் கல்வி, கலை, இலக்கியம் மற்றும் சொற்பொழிவு. 

எழுத்திலிருந்து தமது சமூகப் பயணத்தைத் தொடங்கிய அவர், 120 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மற்றவர்களைப் போல் அல்லாமல் எதையுமே வேறுபடுத்திப் பார்த்துப் பழகிய அவர், தமது எழுத்திலும் தனித்துவத்தைக் காட்டினார். எழுத்தில் மட்டுமின்றி சொற்பொழிவுகளிலும் தம் அபாரத் திறமையை வெளிப்படுத்திய அவர், தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர் ஆனார். 

பெரியார் பிரசவித்த பகுத்தறிவு வீச்சும், மார்க்சிய தத்துவங்கள் ஏற்படுத்திய பாதிப்பும், அம்பேத்கரின் சமூகப் புரட்சியும் அவரை ஆர்ப்பரிக்கச் செய்தது. தத்துவங்களை படித்துப் படித்துப் பேசினார். தமது உரை வீச்சின் மூலம் மடமைக்கு அடிகொடுத்தார். சமூகக் கொடுமைகளைக் கொன்றொழித்தார். பெரியாரின் முன்னிலையில் உரையாற்றி பெரியார் தாசனாக உருமாறினார். 

தமிழகத்தின் எல்லைகளைத் தாண்டி இந்தியா முழுவதும், ஏன் உலக நாடுகள் பலவற்றிலும் பெரியார் தாசனின் பேச்சு ஒலித்தது. அமெரிக்கா,கனடா,ஆஸ்திரேலியா,தா ய்லாந்து,ஐக்கிய அரபு அமீரகம்,மலேசியா,சிங்கப்பூர் என பெரியார் தாசனின் குரல் உலகெங்கும் பரவியது.

பெரியாரைப் பற்றியும், அவர் வகுத்துக் கொடுத்த நெறிகளைப் பற்றியும் ஓர் மாற்றுப் பார்வையை முன்வைத்தார் பெரியார் தாசன். பெரியாரின் மறுபக்கம் அவரால் தான் வெளிப்பட்டது. 

ஆக்ரோஷமும், கோபமும் பெரியார் தாசனிடம் நிறைந்து காணப்பட்டாலும், இயல்பாக அவரிடமிருந்து பொங்கியெழும் நகைச்சுவை அலை அனைவரையும் நனைத்து விடும். சமூகத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் நகைச்சுவை ததும்ப அவர் வருணிக்கும் போது கலகலப்பும், சிரிப்பலையும் பற்றிப் பரவுகிறது. 

பெரியார் தாசன் என்றால் கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என்ற அடையாளங்களோடு சிறந்த நடிகர் என்ற சிறப்பும் சேர்ந்தது. இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய 'கருத்தம்மா' எனும் திரைப்படத்தில், படிப்பறியா பட்டிக்காட்டு மொக்கையனாகத் தோன்றி, சமூக அவலங்களை துல்லியமாகப் பதிவு செய்தார், பெரியார் தாசன். தாம் நடித்த முதல் படத்திலேயே இந்தியாவின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். 

மனோதத்துவத் துறையில் தாம் கற்ற பெற்ற அனுபவத்தின் மூலம் சிறந்த மனவியல் பயிற்சியாளராகப் புகழ் பெற்றார். தோல்வி பயத்தாலும், தாழ்வு மனப்பான்மையினாலும் வாடி வதங்கும் இளையோருக்கும், பிரச்சனைப் புயலில் சிக்கித் தவிக்கும் குடும்பத்தினருக்கும் சிகிச்சைத் தந்து தீர்வைச் சொன்னார். 

இந்துவாகச் சாகமாட்டேன் என்று சூளுரைத்து இந்து மதத்திலிருந்து வெளியேறி பெளத்தத்தைத் தழுவிய அம்பேத்கரின் வழியில் பெளத்தத்தை தழுவினார் பெரியார் தாசன். பெளத்த தத்துவங்கள் குறித்து ஆய்வு நூல்களை எழுதிய அவர், பெளத்தக் கருத்துக்களைப் பரப்பும் பிரச்சாரகராகவும் தீவிரப் பயணம் மேற்கொண்டார். அம்பேத்கரின் இறுதி நூலான 'புத்தரும் அவர் தம்மமும்' என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார். 

'தம்மோடு வாதம் புரிந்து எவரும் வெல்ல முடியாது' எனும் அளவுக்கு பலரையும் மிரள வைத்தவர் பெரியார் தாசன். இந்து மதத்தின் தலைமையகமாகவும், இந்துக்களின் ஆன்மீக குருவாகவும் தம்மை அறிவித்துக் கொண்ட சங்கரமட சங்கராச்சாரியாருடனும், இந்து முன்னணி இராம கோபாலனுடனும் விவாதங்கள் புரிந்த பெரியார் தாசன், தமது அழுத்தமான கேள்விகளால் அவர்களைத் திணறடித்தார். இந்துமத வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்த அவர், அவற்றிலிருந்து மேற்கோள்களையும், ஸ்லோகங்களையும் எடுத்துக் கூறினார். இந்துத்துவத் தத்துவங்களை ஆழ்ந்து உள்வாங்கி அவற்றை சரளமாக எடுத்தியம்பும் பெரியார் தாசனின் திறமைக்கு முன் இந்துமத சாமியார்களும், வீரத் துறவிகளும் திகைத்து நின்றனர். 

'பெரியார் தாசன் என்று பெயர் வைத்துக் கொண்டே, பெரியாரைப் போலவே யாருக்கும் தாசனாக இருக்க சம்மதிக்காதவர் பெரியார் தாசன்' என்று சொன்னார் முத்தமிழறிஞர் கலைஞர். கலைஞரின் கூற்றைப் போலவே, எவருக்கும் அடிமையாகாமல் சுயமரியாதைச் சுடராக ஒளிர்ந்த பெரியார் தாசன், 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்துல்லாஹ் என்று பெயர் மாற்றம் செய்து, இறைவனின் அடிமையாக இஸ்லாத்தில் இணைந்தார்.

இஸ்லாமியராக மாறிய பின் அழைப்புப் பணியில் தீவிர கவனம் செலுத்தினார். ஓயாத பயணங்களை மேற்கொண்டார். உடல்நலனைப் பற்றி கவலையே படாமல் ஊர் ஊராய் சுற்றினார். நுரையீரல் தொற்று நோய் தம்மை தாக்கியிருப்பதைக் கூட கவனிக்காமல் பயணங்களைத் தொடர்ந்தார். இயல்பாக இயங்க முடியாத அளவுக்கு உடல்நிலை மோசமடைந்த பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல் நலிவுற்று மருத்துவமனையில் இருந்தவரை பார்ப்பதற்காகச் சென்ற போது, சிறப்புப் பிரிவுக்குள் பார்வையாளர்களை அனுமதிக்க முடியாது என மறுத்தது மருத்துவமனை நிர்வாகம். உடனே படுக்கையிலிருந்து வெளியேறிய அப்துல்லாஹ் அவர்கள், மருத்துவமனை வளாகத்தில் உள்ள கேண்டீனில் அமர்ந்து நீண்ட நேரம் எம்மோடு உரையாடினார். விரைவிலேயே நோயிலிருந்து மீண்டு விடுவேன் என்றும், சமூகப் பணிக்கு மீண்டும் வருவேன் என்றும் நம்பிக்கையுடன் கூறினார். ஆனால், அவர் மீண்டு வரவே இல்லை.

2001 ஆம் ஆண்டிலிருந்தே அவரை நான் நெருக்கமாக அறிவேன். அவரிடம் மணிக்கணக்கில் உரையாடிய மிகச் சிலரில் நான் ஒருவன். அவரை அழைத்து பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரை நேர்காணல்கள் செய்துள்ளேன்.

ஒவ்வொருமுறையும் அவரை சந்திப்பதற்காக பச்சையப்பன் கல்லூரிக்கு செல்லும் போதெல்லாம், அங்குள்ள கேண்டீனில் அமர்ந்தே பேசுவோம். கடைசியாக அவரிடம் மருத்துவமனை கேண்டீனில் அமர்ந்துதான் பேசினேன்.

இனி எங்குமே அவருடன் பேச முடியாது!

22 comments:

  1. inna lillahi wa inna ilaihi raajioon.

    ReplyDelete
  2. INNA LILLAAHI WA INNA LAIHI RAAJIOON.

    ReplyDelete
  3. Innalillahi vainnailaihi raajioon.

    ReplyDelete
  4. Innallilahi vayinnah ilaihi rajioon. the great person. bcz i met him personally as a doctor, as a man, as a teacher, he usefully adviced me. i met him when he come puttalam for a programme. nice person, finallay he dead as a muslim. alhamdullilah, may allah give jannah in aahira. (aameen).

    ReplyDelete
  5. نسأل الله العافية في دينه ودنياه وأن يتقبل صالح الأعمال من كل ذنب وخطيئة أللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله ونقه من خطايا كماينقى الثوب الأبيض من الدنس واغسله بالماء والثلج والبارد

    ReplyDelete
  6. அவர் ஒரு துணிச்சலான முஸ்லிம்
    அள்ளாஹ் அவரை பொருந்திக்கொள்வானாக
    -முபாறக் அப்துல் மஜீத்

    ReplyDelete
  7. Innalillahi wainna ilaihi rajioon

    ReplyDelete
  8. innalillah...............!

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியுன்... அல்லாஹ் அவரை பொருந்தி கொள்வானாக அவரது உரையொன்றை யூ ட்யூப் "இஸ்லாத்தின் தனித்துவம்" பார்த்தேன்.காத்திரமான கருத்துக்கள் இன்றைய சூழலில் எனது மனத்தை தைத்தது...I don"t associate any association,I do not want dissociate from any muslim நமது நாட்டில் பணியாற்றும் இஸ்லாமிய இயக்கங்களும் சற்று அவரது கருத்து பற்றி சிந்தித்தால் என்ன...

    ReplyDelete
  10. innalillahiwainnailaihirojiun.

    ReplyDelete
  11. allah avarukku arulpurivanaha

    ReplyDelete
  12. Innaa lillahi.......
    May Almighty Allah Grant him the paradise that He promised!

    ReplyDelete
  13. Innaa lillahi wa inna ilaihi raajioon
    may allah grand him jannathul firdous

    ReplyDelete
  14. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
    அல்லாஹும்ம அஜிர்னீ பீ முசீபதீ வஹ்லுப் லீ ஹைரன் மின்ஹா

    ReplyDelete
  15. إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ

    ReplyDelete
  16. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

    30.12.2011 வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு K-Tic பள்ளிவாசலில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேராசிரியர் அவர்கள் கலந்து கொண்டு "முஸ்லிம்களிடம் இவ்வுலகம் எதிர்பார்ப்பது என்ன?" என்ற தலைப்பில் சிந்திக்க வைக்கும் அற்புதமான பேருரைரையாற்றிய நிகழ்வுகள் இன்றும் நினைவுகளில் நிழலாடுகின்றன.

    எல்லாம் வல்ல அல்லாஹ் பேராசிரியர் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது. ஆமீன்!

    உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

    நன்றி! வஸ்ஸலாம்.

    அன்புடன்....

    பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா
    அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ.,
    பொதுச் செயலாளர்
    மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்.
    குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
    துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82
    மின்னஞ்சல்கள்: q8_tic@yahoo.com / ktic.kuwait@gmail.com / ktic.kuwait@yahoo.com
    இணையதளம்: www.k-tic.com
    யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
    கூகுள் குழுமம்: https://groups.google.com/q8tic

    ReplyDelete
  17. இன்னாலில்லாஹி வயின்னாஇலைகி ராஜிஊன்.

    ஒருவர் செய்யும் சாதணை அவர் எம்மை விட்டுச் சென்றதன் பின் தான் மெய்சலிர்க்க வைக்கும்...
    உண்மை உரைப்போரை , உண்மை மனம்கொண்டோரை அல்லாஹ் கைவிடமாட்டான் என்பதற்கு அப்துல்லாஹ் என்ற இம்மனிதர் ஓர் சான்று

    ReplyDelete
  18. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்குர்ஆனும் சுன்னாவும் கூறும் அற்புதமான உளவியல் கருத்துக்களையும் அழகிய வாழ்க்கை நெறியினையும் உலகுக்கு எத்திவைக்க வேண்டும் என்ற நோக்கில் உழைத்த ஓர் அறிஞரை முஸ்லிம் சமூகம் இழந்துள்ளது. இஸ்லாமியராய் வாழ்ந்த மிகக்குறுகிய காலத்தில் இஸ்லாத்துக்காக அன்னார் ஆற்றிய பணி மகத்தானது. அவரது வாழ்வு எமக்குப் படிப்பினை தர வேண்டும். அல்லாஹ் அன்னாரின் பணிகளைப் பொருந்திக்கொள்வானாக.

    ReplyDelete
  19. Inna lillahi wa inna ilaihi raajiuoon ( allahummag fir lahu warhamhu ) allahummahsin aaqibatana fil umoori kulliha

    ReplyDelete
  20. Aaloor Shanawas should delete his article's ending line, if he believes that he can speak to Abdullah Periyardasan in the heaven! Why not?

    ReplyDelete
  21. Mohamed Niyas
    Innalilahi Vayinnaa ilaihi rajiyoon

    ReplyDelete
  22. Innalillahi Vainnailaihi Rajioon

    ReplyDelete

Powered by Blogger.