Header Ads



மியன்மாரில் தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளிலிருந்து ஜனாஸாக்கள் மீட்பு



மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழத்தப்பட்ட வன்முறை தாக்குதல்களில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கலவரத்தின்போது தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளில் இருந்து மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதில் தீக்கிரையான கட்டடம் ஒன்றுக்குள் இருந்து மேலும் 21 உடல்கள் மீட்கப்பட்டதாக ஒருவர் ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு கூறியுள்ளார். நீடித்த கலவரத்தில் கத்தி கம்புகளுடன் வந்த கலகக்காரர்கள் கட்டடங்கள் மற்றும் பள்ளிவாசல்களை தீக்கிரையாக்கினர்.

எதிர்காலத்தில் நாம் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறது என அப்பிரதேச முஸ்லிம்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.