Header Ads



இனவாத செய்திக்கான பதில் கட்டுரை..!



கடந்த ஞாயிறுக்கிழமை தமிழ் பத்திரிகையொன்றில் இரு இன சமூக ஒற்றமையை சீரழிக்கும் குடியேற்றங்கள் என்ற தலைப்பில் ஒரு செய்தி  வெளியாகியிருந்தது. அக்கட்டுரைக்கான பதில் கட்டுரையே இது.

 (அபூ தனா)

மேற்கூறப்பட்ட செய்தி மன்னார் மாவட்ட அபிருத்திக்குழுக் கூட்டத்தில் இடம் பெற்ற முரண்பாடுகளை மையமாக வைத்து மீளக்குடியேறிய முஸ்லிம்களையும், மீள்குடியேற உள்ள முஸ்லிம்களையும் அச்சுறுத்துவதாக  அமைந்து  உள்ளது. முதலில் இதனைத் கண்டிப்பதுடன் சுற்றி வளைக்காமல் 1990 போல முஸ்லிம்களை வெளியேற்றப் போகிறோம் என எழுதி விடுங்களேன்.

ஜுலைக் கலவரத்தில் தலைதெறிக்க ஓடிய தமிழர்களால் எழுந்து நின்று போராட முடிந்தது என்றால் அதேபோல் ஏன் 90ல் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களால் முடியாது என்பதை யோசித்துப்பாருங்கள். நாம் பெரிய ஆயுத இயக்கத்தை வைத்திருந்தவர்கள் எனும் மமனதயில் முஸ்லிம்களை சீண்டும் விடயத்தை விட்டுவிடுங்கள். பாதுகாப்புச் செயலாளர் காடுகளை அழித்து முஸ்லிம்களைக் குடியேற்ற அனுமதிவழங்கியுள்ளாராம் இதனால் மன்னார் தொடக்கம் முல்லைத்தீவு வரையான தனி முஸ்லிம் அலகு உருவாகப் போகிறதாம் 

இது அறிவியல் ரீதியாக சிந்தித்தால் புரியும் ஒரு இனவாதக் கற்பனைக் கதை என்று மன்னார் மூர் வீதியிலும், யாழ் மூர் வீதியிலும் , முஸ்லிம்களின் பெறுமதியான நிலங்களையும், காணிகளையும். நீங்கள் தவித்த முயலை அடிப்பது போல குறைந்த விலைக்கு வாங்கியதால் முஸ்லிம்களுக்கான காணித் தட்டுப்பாடு மேலும் அதிகரித்தது. சனத்தொகை தொடர்பான அறிஞர் மல்டசின் கோட்பாட்டின் அடிப்படையில் அகதி முகாம்களில் வசிக்கும் மக்களின் சனத்தொகை துரிதமாக அதிகரிக்கும்.

எம்மை அகதியாக்கி முகாம்களுக்கு அனுப்பினீர்கள் எமது சனத்தொகை பல்கிப் பெருகியுள்ளது. எமது மக்கள் மீள்குடியேறக் காணி பற்றாக்குறையாக உள்ளது தீர்வாக அமைச்சர் அரசின் அனுமதியைப் பெற்றுக் குடியேற்றம் செய்யவுள்ளார். இதில் எந்த ஒளிவு மறைவுமில்லை. இதைத் தனியலகு என்பதா? 

மன்னார் குடியேற்றத்திற்குகுடியேற்றம் பல பின்னணியைக் கொண்டுள்ளதாம்.சிங்கள குடியேற்றத்திற்கு சர்வதேச எதிர்ப்புள்ளதாம். இதனால் முஸ்லிம் மக்களைக் குடியேற்றி தமிழ், குடியேற்றத்திற்கு மோதலை அரசு தூண்டுகிறதாம்.

என்ன? அற்புதமான கண்டுபிடிப்பு ஏதோ முஸ்லிம்கட்கும் மன்னாருக்கும் தொடர்பு இல்லாதது போலவும், வெளிமாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களைக் கொண்டு வந்து குடியேற்றுவது போலவும் இச்செய்தி எழுதப்பட்டுள்ளது. சிங்களவர்கள் முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடிவிட்டு வெளியேற்றியதாக வரலாறில்லை தொன்று தொட்டு முஸ்லிம்களும், சிங்களவர்களும் நல்லுறவுடன் வாழ்ந்து வந்ததாகவே வரலாறுண்டு

மீளக்குடியேறிய முஸ்லிம்களும், தமிழர்களும் ஒற்றுமையாக இருப்பதையே நான் கண்டுள்ளேன். வீண் பிரச்சினையை பரப்புபவர், ஊடகவியலாளர்களும், அரசியல் வாதிகளுமே. செயற்கையான முரண்பாடுகள் உருவாக்கப்பாடுபட வேண்டாம். மன்னாருக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள தொடர்பு கி.மு இருந்தேயுள்ளது. மாந்தை துறைமுகம், ஆதாமின் பாலம், பெருக்க மரங்கள், தலை மன்னார் ஆதாம் அரங்கு என்பன சில சான்றுகளாகும்.

மன்னார், தலைமன்னார், முசலி போன்ற இடங்களில் இயற்கைக் காடுகள் அழிக்கப்படுவதால் சூழல் மாசும் அச்சுறுத்தலும் ஏற்படுமாம்.

'ஆடு நனைகிறதென்று ஓநாய் கவலைப்பட்டதாம்' அது போல உள்ளது யுத்தத்திற்காக ஆயிரக் கணக்கான பனை மரங்களையும், பாலை , முதிரை, தேக்கு , வேம்பு போன்ற விலையுயர்ந்த மரங்களையும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி பங்கறுக்காக தறித்த போதும், குண்டு வெடிப்புகள் சண்டையின் போதெல்லாம் சூழல் மாசடைய வில்லையா? அப்போது உங்களுக்கு இந்த ஞானம் இல்லையா ?   ஏன் அதைத்தடுக்க செய்தி போடவில்லை .

மன்னார், முல்லைதீவு, யாழ் முஸ்லிம்களுக்கு புத்தளத்தில் நிரந்தர வீடு உள்ளதாம்..!

முஸ்லிம்கள் மீளக்குடியேற  வரக்கூடாது என்பதற்காக கருத்துக்கணிப்பு வீதத்தையே மாற்றி புத்தளத்தில் வீடுகளை கட்டிக்கொடுத்து தாயக மண்னை மறக்கச்செய்ய திரைமறைவில் நீங்கள் செய்த சதியை நாம் மறக்கவில்லை. 

தமிழ் நாட்டில் 2500 வீடுகளை தமிழக அரசு கட்டிக் கொடுக்கவுள்ளது. அப்படியாயின் அவர்கள் தாயகத்திற்கு மீழ்குடியேற வரமுடியாதா? மேலும் மேற்கு நாடுகளிலும், அவுஸ்ரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் அகதியாகச் சென்ற தமிழர்கள் குபேரர்களாக மாடி வீடுகளுக்கும், நிறுவனங்களுக்குச் சொந்தக்காரகாரர்களாகவும் உள்ளனர். அவர்கள் மீண்டும் தாயகத்தில் வந்து குடியேற முடியாதா? அவர்களின் வாக்காளர் பதிவுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதா? ஓன்றை மாத்திரம் புரிந்து கொள்ளுங்கள் தாம் பிறந்து வாழ்ந்த மண்ணுக்குத் திரும்பும் உரிமையை யாராலும் பறிக்கவோ தடுக்கவோ முடியாது.

 உங்களால் முடியுமென்றால் மன்னாருக்கு தமிழ் பேசும் அரச அதிபரை கொண்டு வாருங்கள். முள்ளிக்குள மக்களை  முள்ளிக்குளத்தில் குடியேற்றுங்கள் இதை விடுத்து வீண் அறிக்கைகளை விடுக்காதீர்கள்.

வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்பு 22 வருட காலப் பகுதிகளுக்குள் வடக்கில் இருந்த அரச காணிகள் 1000க் கணக்கான ஏக்கர்கள் தமிழ் மக்களுக்கும். வழிபாட்டுத் தளங்களுக்கும் வழங்கப்பட்டதை உம்மால் மறுக்கமுடியுமா ? 

உதரணம்..

 மன்னாரில் மாத்திரம் 2500க்கு மேற்பட்ட காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன இதையெல்லாம் மறைத்துவிட்டு முஸ்லிம்கட்காக காடுகள் அழிக்கப்படுவதாகவும் முஸ்லிம் அலகு உருவாகப் போக உள்ளதாகவும் பூச்சாண்டிகாட்டாதீர்கள்.

புத்தளத்தில் 22 வருடங்களும் வட புல முஸ்லிம்கள் பொலீத்தீன் வீடுகளிளும், தகரக் கொட்டிலுமே இருந்திருக்க வேண்டும் என நீர் கருதுகிறீரா? அன்று. சூசை தாசன் ஐயாவுக்கும், அழகக்கோனாருக்கும் வாக்களித்தவர்களே நாங்கள். 

இன்று எம் உடன் பிறப்புகளுக்கு வாக்களிக்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது..?
   


  

4 comments:

  1. COME ON....COME ON......
    IPPATHAN DHUKKATHILA IRUNTHU AKKADAVANKAL VILIDHUIRRUKKAKA

    ReplyDelete
  2. இதில் தமிழில் type தெரியாத சகோதர்கள் இவ்வாறு download செய்யய்லாம் ;www.google.com/ime/transliteration
    idhil tamil language i download seiwadan moolam idil tamilil type panna udaviyaga irukkum

    ReplyDelete
  3. நன்றி மறந்த சில தமிழர்கள் இப்போது சிங்களவர்களுடன் சேர்ந்து முஸ்லிம்களை கொச்சைப்படுத்தும் செயல் இது,நாளை இங்கு அரசாங்கம் சின்ஹலவர்களை குடியேற்றம் செய்தால் இந்த தமிழன்களால் என்ன செய்ய முடியும்.எது எவராயினும் எமது முஸ்லிம் தலைவர்கள் விட்டுக்கொடுத்து ஒற்றுமைப்படாதவரை எமது சமுதாய வெற்றி??????????????????????.

    ReplyDelete
  4. Muslim kali seendi pardaal vilavu vara madiri irukkum ilankai varladril andu thoddu indru varai ilankail muslim kaline varalatrai yavarum arindiruppaarhel vaandaam vaandaam inda ina varupadu vandaam idu innum dodarndu kondirundaal naankal yadadkum anja powadum illai adipaniya powadum illai ALLAH yenkalodu irukiran

    ReplyDelete

Powered by Blogger.