Header Ads



நமக்கான பொறுப்பும், மக்கள் பாதுகாப்பும்


(எம்.எம்.ஏ.ஸமட்)

இயற்கை வளம் நிறைந்த இலங்கைத் திருநாடு பல்வேறு துன்பியல் நிகழ்வுகளால் காலத்திற்குக் காலம் அவஸ்தைப்படுவது இயற்கையின் நியதியா? அல்லது மனித செயற்பாடுகளின் விளைவா?

கடந்த 3 தசாப்த காலமாக இந்நாடு எதிர்நோக்கிய யுத்த அவலங்கள் ; காரணமாக இந்நாட்டில் வாழுகின்ற  பல்வேறு சமூகங்களையும் சார்ந்த மக்கள் உயிர் இழந்தும்;, நிரந்தரமாக அங்கவீனமாக்கப்பட்டும், காயப்பட்டும் அதனால் சமூக பொருளாதார பிரச்சினைகளை உள்வாங்கியும் வாழ்ந்த காலங்கள் மறந்தும் மறக்க முடியாத காலங்களாக நம் மனங்களில் சஞ்சரித்துக் கொண்டிருக்கையில், வீதி விபத்துக்களாலும் கொலை, கொள்ளை, கடத்தல் சிறுவர் துஷ்பிரயோகம், வீட்டு வன்முறைகள் என்ற படுபாதாலச் சம்பவங்களினாலும்  நோய்களாலும் விலைவாசி உயர்வினாலும் நமது மக்கள் துன்பத்துக்கு மேல் துன்பத்தையும் இன்னல்களையும் சோதனைகளையும் தினமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மனித செயற்பாடுகளின் பயம் ஒரு புறம் மக்களை ஆட்கொள்கையில் நோய்களின் தாக்கம் மறுபுறம் மக்களை இம்சைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதிலும் நுளம்பினால் ஏற்படும் ஆட்கொல்லி நோயான டெங்குக் காய்ச்சல் குறித்த அவதானம் நம்மில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் இன்னும் பலரின் சிந்தனையில் இந்நோய் தொடர்பான கவனம் இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது.
தற்போது வடகீழு; பருவபெயச்சி மழை ஆரம்பித்துள்ளது. நாடெங்கும் பரவலாக மழை பெய்;கிறது. மழை காலம் பல்வேறு தொற்று நோய்க் காவிகளுக்கான வசந்த காலமாகும். இந்தக் காலத்தில் ஏற்படும் பெரும்பாலான நோய்களுக்கு நுளம்புகளே பிரதான காரணிகளாக இருக்கின்றன. நுளம்புகள் பெருகி வளர்வதற்குத் தகுந்த சூழலைத் தோற்றுவிப்பதில் மழை நீர் பெரும் பங்கு வகிக்கிறது. பெருகி வளரும் நுளம்புகளினால் ஏற்படும் நோய்கள் தொடர்பாகவும் நோய்களுக்கான சிகிச்சை பெறுவது தொடர்பாகவும் அவற்றை எவ்வாறு கட்டுபடுத்த முடியும் என்பது குறித்தும் ஒவ்வொரு தனி நபரும் குடும்பமும் அறிந்திருப்பது அவசியமும் காலத்தின் தேவையுமாகும்.

நுளம்புகள் கடிப்பதன் மூலமே டெங்கு, மலேரியா, யானைக்கால் நோய் மற்றும் மூளைக் காய்ச்சல் போன்ற நோய்கள் எற்படுகின்றன. பெரும்பாலனா நுளம்புகள் மாலை வேளையிலும் இரவு நேரங்களிலும் கடிக்கின்றன. எனினும் டெங்குக் காய்ச்சலை ஏற்படுத்தும் அல்லது பரப்பும் நுளம்புகள் பகல் வேளையிலேயே கடிக்கின்றன. வீட்டுக்குள்ளே மாத்திரமின்றி வெளிப்புறங்களிலும் நுளம்புகள் கடிக்கலாம். நுளம்புக் கடியிலிருந்தும் அதனால் ஏற்படும் நோய்களிலிருந்தும் நம்மையும் நமது குடும்பத்தினரையும் அயலவர்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம் அனைவரையும் சாரும். நமது சுற்றுச் சூழலில் நுளம்புகள் பெருகக் கூடிய சூழலைத் தோற்றுவிக்காமலும் அவ்வாறு நுளம்புகள் பெருகக்கூடிய சூழல் காணப்படுமிடத்து அவற்றை அழிக்கக் கூடியவர்கள் வந்து அழகிக்கும் வரை காத்திராமல் நம்மால் முடிந்தளவு அச்சூழலைச் சுத்தம் செய்து நுளம்பு பெருக்கத்திற்hன வாய்ப்பை இல்லமால் செய்தல் வேண்டும். 

டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் 'ஈடிஸ் ஈ ஜிப்டஸ்', 'ஈடிஸ் எல்பொபிக்டஸ்' ஆகிய நுளம்புகள் நீர் சேரக் கூடிய வெற்றுப் பாத்திரங்கள், வெற்று டின்கள், தயிர்ச்சட்டிகள் முட்டிகள், பழைய டயர்கள், சிரட்டைகள், கோப்பைகள் இன்னும் பல நீர் தேங்கி நிற்கக் கூடிய இடங்களிலிருந்து பெருகுகின்றன. 

நுளம்பகள் பெருக்கூடிய  இடங்கள் தொடர்பில் தொலைக்காட்சி, வானொலி மற்றும் இதர வழிகளினூடாக விழிப்பூட்டல் செய்யப்பட்டும் அது குறித்து மக்களில் பலர் அலட்சியப்போக்குடன் செயற்படுவதனாலேயே டெங்கு நோயைக் கட்டுப்படுத்த முடியாதிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மக்களின்  மனோநிலையானது இந்நோய் தொடர்பிலும் இவற்றைத் தடுப்பது தொடர்பிலும் திசைதிருப்பப்படாத நிலையில் இந்நோயைக் கட்டுப்படுத்த முடியாது. அதாவது நுளம்புகள் பெருகுவதைத் தடுக்க முடியாது.

நுளம்புகள் பெருகுவது தடுக்கப்படல் வேண்டுமாயின் நுளம்புகள் பெருகி வளரும் என்று கருதப்படும் மேற்கூறப்பட்ட பொருட்களை உடைத்து நொருக்கலாம் அல்லது புதைக்காலம். எரிக்கக் கூடியவற்றை எரித்து விடலாம். மலர்ச்சாடிகள், எறும்புகளை அகற்றுவதற்கு வைக்கப்படும் தண்ணீர்ச்சாடிகள், என்பவற்றிலுள்ள தண்ணீரில் சிறிது உப்பை அல்லது சவர்க்காரத்தைக் கலந்துவிடவும். முடியுமாயின் அவற்றிலுள்ள நீரை அடிக்கடி மாற்றவும். கூரையின் மேல் அல்லது முற்றங்களில் கிடக்கும் நீர் சேரக் கூடிய டயர்களில் மண்ணை நிரப்பி விடவும் அல்லது நீர் ஓடிவிடக் கூடியவாறு அவற்றில் ஓட்டைகளை ஏற்படுத்தி விடவும். கூரைப் பீலிகளில் நீர் தேங்கி நிற்காதவாறு அவற்றில் சேரக் கூடிய குப்பை கூழங்களை அடிக்கடி சுத்தம் செய்து விடவும்.

இவ்வாறான நமது நடடிவக்கைகள் மூலம் நமது வீட்டுச் சூழலில் நுளம்புக் குடம்பி வளர்வதைத் தடுக்கலாம். நமது வீட்டுச் சூழலில் மாத்திரமின்றி நமது அயலவர்களின் வீட்டுச் சூழல், புறச்சூழல், பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் இத்தகைய நடவடிக்கைகளை நம்மாலோ அல்லது அதற்குரியவர்களினூடாகவோ மேற்கொள்ளும் போது நம்மையும் பாதுகாது நமது அயலவர்களையும் சமூகத்தையும் இந்நோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாக்க முடியும்.

அதுமாத்திரமின்றி, இந்நோய் தொடர்பில் அலட்சியப்போக்கை கைவிடுதல் அவசியமானது. இந்நோயின் அறிகுறிகள் காணப்பட்டால் உடன் வைத்தியரை நாடி அதற்கான சிகிச்சைகளை உடன் பெற்றுக்கொள்ளுதல் முக்கியமானது.
கடும் காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல்வலி, வயிற்றுளைச்சல் ஆகியன இந்நோயின் சாதாரண அறிகுறிகளாகும். இவ்வடையாளங்களோடு தோலின் அடியில் சிறிய இரத்த (சிவப்பு) அடையாளாம், கண்கள் சிவப்பு நிறமாதல், மூக்கினால் இரத்தம் கசிதல், மலசலத்துடன் இரத்தம் வெளியாதல், முரசினால் இரத்தம் வெளியாதல் வாந்தி அல்லது மலம் கறுப்பு அல்லது செம்பட்டை நிறமாதல், வயிற்று நோவு போன்றவை டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சலின் அடையாளங்களாக இருக்கும். அத்துடன் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவரின் காய்ச்சல் திடீரென குறைந்து விடக் கூடும் என்றாலும் நோயாளி சுகயீனமாகக் காணப்பட்டால் அது பாராதூரமான ஒரு நிலையாகும். அப்படிப்பட்ட ஒரு நோயாளிக்கு உடம்பு குளிர்ந்து போதல், உடல் வெளிறல், கலக்கமான, தூக்கமான நிலை, மூச்செடுத்தல், நாடி ஓட்டம் வேகமாதல் போன்ற பாரதூரமான அடையாளங்கள் ஏற்படுதல் நோய் கடுமையானதைக் காட்டும். விஷேடமாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ள ஒரு பிள்ளையின் காய்ச்சல் திடீரென இறங்குமெனின் அவதானமாக இருக்க வேண்டும். 

இவ்வாறு  சுகாதார அமைச்சின் சுகாதாரக் கல்விப் பிரிவும் ஏனைய சுகாதார நிறுவனங்கள், தொண்டு அமைப்புகள் மக்களை அறிவூட்டுகின்ற போதிலும் பாதிக்கப்பட்ட நபர் சார்ந்ததோர் இவை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தாமையும் கடந்த காலங்களை விடவும் ஓரிரு வருடங்களில் டெங்கு நோயினால் ஏற்பட்டுள்ள தாக்கம் அதிகாமாக உள்ளமைக்கு காரணங்காக இருக்குமென்று கூறப்படுகிறது. ஆதலால் அடையாளங்கள் காணப்படுமிடத்து அவற்றை அலட்சியம் செய்தல் நம்மை மேலும் ஆபத்துக்குள் தள்ளிவிடும். 

சுகாதார அமைச்சின்  தகவல்களின்படி  கடந்த வருடம் டெங்கு காய்ச்சினால் நாடு பூராகவும் ஏறக்குறைய 31 ஆயிரத்தும்  அதிகமானோர் பாதிக்கப்பட்டும் 250க்கும் அதிகமானோர் உயிர் இழந்தும் உள்ளனர். இந்நோய்க்கு சகிச்சை அளிப்பதற்கும் இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்குமாக அரசாங்கம் பல மில்லியன் ரூபாய்க்களைச் செலவிடுகிறது. டெங்கு நோய் மாத்திமின்றி நுளம்புகளினால் ஏற்படும் ஏனைய நோய்களான மலேரியா,யானைக்கால் நோய் மற்றும் மூளைக் காய்ச்சல் என்பவற்றிலும்  நமது கவனம் செலுத்தப்படுதல் அவசியமாகும். இந்நோய்களை ஏற்படுத்தும் நுளம்புகள் வளராமல் தடுக்கப்படுமாயின் நுளம்புகளைக் கட்டுப்படுத்தவும் நுளம்பினால் ஏற்படும் நோய்களைக் சுகப்படுத்தவும் செலவிடப்படும் நிதியைக் கொண்டு மக்கள் வாழ்விற்கு பயனளிக்கும் அபிவிருத்தியில் செலவிட முடியும். 

சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு டெங்குக் காய்ச்சலைக்கட்டுப்படுத்தவும் நுளம்புகள் பெருவதைத் தடுக்கவும் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இருப்பினும் இத்திட்டங்கள் வெற்றியளிப்பது பொது மக்களின் நடவடிக்கைகளிலே தங்கியுள்ளது. மக்களின் மனப்பாங்கில் மாற்றம் ஏற்படாத வரையில் எத்தகைய தண்டனைகளை ஏற்படுத்தினாலும் எந்தச் செயற்றிட்டத்ததை அறிமுகப்படுத்தினாலும் அவற்றினால் எதிர்பார்க்கும் வெற்றியை அடைய முடியாது. அப்படியாயின் முதலில் மக்களின் மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளமென்பதையும் சுட்டிக்காட்டவேண்டிய தேவையுள்ளது.

அவ்வாறு இருந்த போதிலும், உயிர்கொல்லி நோய்களை ஏற்படுத்தும் நுளம்புகளிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவது காலத்தின் தேவையாக மாறியுள்ளதால் இந்நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக இந்நாட்டு மக்களே கூடிய அவதானமும் கவனமும் செலுத்த வேண்டிய காலத்தின் கட்டாயத் தேவைக்குள் உள்ளாக்கப்பட்டும் பொறுப்பளிக்கப்பட்டும் உள்ளோம் என்பதை நினைவில் வைத்து செயற்படும்போது, நமக்கான பொறுப்பைச் செய்தவர்களாகவும் அதனால் நமது மக்களைப் பாதுகாத்தவர்களாகவும் நமது மனச்சாட்சியின் முன் நாம் நமது தேசத்திற்கு உதவினோம் என்ற பெறுமையுடன் வாழ்ந்து மறைய முடியும்.


No comments

Powered by Blogger.