Header Ads



பலஸ்தீனில் இப்படியும் நடந்தது..! (படம் இணைப்பு)


பாலஸ்தீனம் நாட்டை சேர்ந்தவர் அம்மர் அல்ஷபன். இவர் சட்டவிரோத ஆக்கிரமிப்பு நாடான இஸ்ரேல் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். தற்போது இவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவரது மனைவி தனது கணவரின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார். எனவே, ஜெயிலில் இருக்கும் தனது கணவரின் உயிரணுவை (விந்து) கடத்தினார்.

பின்னர், டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் செயற்கை கருவூட்டல் (டெஸ்ட்டியூப்) செய்து கொண்டார். அதை தொடர்ந்து கர்ப்பம் ஆன அவர் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இக்குழந்தை பாலஸ்தீனத்தில் நப்லஸ் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் பிறந்தது. இதை அறிந்த அம்மர் அல்ஷபன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது தனக்கு மகன் பிறந்து இருப்பதாக சந்தோஷப்பட்டார்.

பலமுறை உயிரணுவை கடத்தி செயற்கை கருவூட்டல் தோல்வி அடைந்ததாகவும் பின்னர் வெற்றிபெற்று தனக்கு குழந்தை பிறந்து இருப்பதாகவும் கூறினார்.

No comments

Powered by Blogger.