Header Ads



ஹெல்மட் அணிபவர்களின் கவனத்திற்கு - வாசிக்கத் தவறாதீர்கள்

ஹெல்மட் அணிவதன் காரணமாக பாதகங்கள் எந்த அளவுக்கு இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு அதிகரிக்கும், எந்த அளவுக்கு நாளைய வாழ்க்கையில் பெரும் தாக்கங்கள் இதன் காரணமாக உருவாக நேரிடும் என்பதை அக்குபங்சர் எனும் சித்தாந்தத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தலைப்பகுதியில் உயிர் இயக்க சக்தி நாளம் நடு மத்தியில் நேர்கோடாக அமைந்துள்ளது. உயிர் சக்தி நாளத்தை அடுத்து சிறு நீர்ப்பை சக்தி நாளங்கள் அதன் இருபுறமும் அமைந்துள்ளது. இதனையடுத்து உயிர் சக்தி நாளம் அமைந்துள்ள நடு மையக் கோட்டின் இருபுறமும் பித்தப்பை சக்தி நாளங்கள் அமைந்துள்ளன. இதனையடுத்து நடு மைய்யக் கோட்டின் இரு புறங்களிலும் தேக வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் சக்தி நாளங்கள் அமைந்துள்ளன. இவையனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றிருக்கக் கூடியது தலைப்பகுதி முதலில் தலையின் நடு மையக்கோட்டின் அமைந்துள்ள உயிர் சக்தி நாளத்திலிருந்து தூரமாகவுள்ளது.

ஹெல்மட் அணியும் பொழுது அதனுடைய கீழ் ஓரப் பகுதி இந்த நாளங்களை அழுத்திப் பிடிக்கிறது என்பதை நீங்கள் பார்க்க முடியும். சாதாரணமாக சக்தி நாளங்கள் அழுத்தப்படக் கூடாது. அவ்வாறு அழுத்தப்படுமானால் அதனுடைய விளைவுகளாக நோய்கள் தோன்றும் இந்த நோய்கள் படிப்படியாக வலிகளாக கழுத்திலும் பிடரிகளிலும் ஏற்படும். முழங்கை வலி, தோள்பட்டை வலி, மணிக்கட்டு வலிகள் இன்னும் விரல் மூட்டுகளில் வலிகள் போன்றவற்றைத் தோற்றுவிக்கும்.

காதைச் சுற்றி இந்த சக்தி நாளம் பரவியிருப்பதைப் பாருங்கள். ஹெல்மெட் அணிவதன் காரணமாக பிற்காலத்தில் காதுகளில் மந்தம் ஏற்படலாம். இன்னும் காதுகளில் வலிகளும் அடிக்கடி சீழ்ப் பிடித்தலும் உருவாகும். கண்களின் இருபுறமும் வெளிப்புறங்களில் நெற்றிப் பொட்டுக்களில் தாங்க முடியாத வலி தோன்றினால் அது இந்த சக்தி நாளத்தில் ஏற்பட்டுள்ள பாதகங்களின் காரணமாகவே ஆகும்.

ஹெல்மெட் மற்றும் கண்ணாடிகளை அணிவது இந்த சக்தி நாளங்களைப் பாதிக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். சிறு பிள்ளைகளுக்கு கண்ணாடிகளை அணிவிக்கும் பொழுது காதுகளைச் சுற்றி அமையும் அதனுடைய பிரேம் நிச்சயமாக இவர்களுடைய காதுகளை பாதிக்கும். அடிக்கடி காதுகளில் சீழ் பிடிக்கும். இதனை மற்ற மருத்துவத்தால் ஒரு போதும் குணப்படுத்த முடியாது.

 எத்தகைய அன்டிபயோடிக் மருந்துகளைக் கொடுத்தாலும் குணமாகாது. குணமாக இந்தப் புள்ளிகளுக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் பாதுகாப்பீர்களானால் நாளை வரக்கூடிய மணிக்கட்டு வலிகள், விரல் மூட்டுகளின் வலிகள், முழங்கை தோள் பட்டை வலிகள், பிடரி மற்றும் காது நெற்றிப் பொட்டு வலிகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

அடுத்து பித்தப்பை சக்தி நாளம் தலையின் பக்கவாட்டு முழுவதும் இந்த சக்தி நாளம் பரவியிருக்கிறது. தலையின் இருபுறமும் இது அமைந்திருக்கிறது. ஹெல்மெட் அணியும் பொழுது இந்த சக்தி நாளங்களே பெரும்பாலும் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. இதன் விளைவு வெய்யில் காலங்களில் ஏற்படும் மயக்கம், தலைவலி, குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படுகிறது. பலருக்கு சன் ஸ்ட்ரோக் ஏற்பட்டு இறப்போரும் இருக்கின்றனர். ஹெல்மெட் அணிவதன் காரணமாக வெயிலின் உச்சகட்டத்தில் வாகனங்களை ஓட்டிக் கொண்டு இருக்கும் நிலையில் இந்த விபத்து ஏற்பட நிச்சயமாக வாய்ப்புண்டு.
ஹெல்மெட் அணிவதன் காரணமாக மயக்கம், வாந்தியுணர்வு ஏற்பட்டல் இது மட்டுமல்ல ஹெல்மெட் கடுமையான கோடை காலங்களில் அணிந்ததன் காரணமாக அதன் விளைவுகள் ஹெல்மெட் அணியாத போதிலும் வெயிலில் செல்லும் போது சன் ஸ்ட்ரோக் ஏற்பட்டு விடலாம்.

அடுத்து சிறு நீர்ப்பை சக்தி நாளம் அமையப்பெற்ற தலைப்பகுதியைப் பாருங்கள். ஹெல்மெட் அணிவதன் காரணமாக யாருக்கு சிறு நீர்ப்பை பலவீனமாக இருக்கிறதோ அவர்கள் அதை அணிய நேரிட்டால் இதன் காரணமாக இந்த சக்தி நாளங்கள் அழுத்தத்திற்கு உட்பட்டு விட்டால் கண்களிலிருந்து தலை முழுவதும் வலி ஏற்பட ஆரம்பிக்கும். கண்களின் புருவங்களின் மத்தியில் கடுமையான உளைச்சல் ஏற்படும், தலையை ஆட்டினால் நடு மையக் கோட்டிற்கு இருபுறமும் தலையில் நீர் கோர்த்துக் கொண்டது போன்று பாரம் ஏற்படும். கழுத்தின் பின் பகுதியின் மையத்தில் ஏற்படும் வலிகள், குதிகால் வலி, போன்றவை ஹெல்மெட் அணிவதன் காரணமாக எந்த நேரத்திலும் தோன்றக்கூடிய நோய்களாகும். இவையனைத்தும் கோடை காலங்களில் ஹெல்மெட் அணிவதன் காரணமாக உடல் நிலையில் ஏற்படும் மோசமான விளைவுகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கோடை காலத்திலும், மற்ற நேரங்களிலும் ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டியவர்கள் அவர்களுக்கு ஏற்படும் மேலே கண்ட அனைத்து நோய்களிலிருந்தும் அக்குபங்சர் சிகிச்சையின் மூலம் மேற்படி நோய்கள் வராமலும், ஏற்கனவே அவதிப்படுபவர்களையும் குணப்படுத்த முடியும். இரத்த அழுத்த மாத்திரைகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளை அக்குபங்சர் மூலம் குணப்படுத்தலாம். எப்போது இரத்த அழுத்த மாத்திரைகளை ஒரு நோயாளி சாப்பிட ஆரம்பிக்கிறாரோ அப்போது தொடங்குவது தான் சிறுநீரகங்களின் அழிவு.

நுரையீரலும் சிறு நீரகங்களும் பாதிப்படைய ஆரம்பிக்கும் போது தூக்கமின்மை ஏற்பட ஆரம்பிக்கிறது. காரணம் தெரியாத பயமும் தூக்கத்தை கெடுக்கும். இரண்டு மூன்று மணிக்கு மேல் பின்னிரவில் தூக்கம் கலைந்து விடுமானால் அது நுரையீரல் பாதிப்பை வெளிப்படுத்துகிறது. ஆண்களையும் பெண்களையும் மலடுகளாக்குவதும் இந்த இரத்த அழுத்த மாத்திரிரைகள்தான். ஆண்களானாலும் சரி பெண்களானாலும் சரி இரத்த அழுத்த மாத்திரையை உட்கொள்ள ஆரம்பித்த சில வருடங்களில் உடலுறவில் நாட்டமிழப்பார்கள். ஈடுபட நினைத்தாலும் அவர்களுடைய உறுப்புகள் ஒத்துழைக்காது.

சிலருக்கு வயிற்றின் மேல் பகுதியில் சிலருக்கு அடிவயிற்றில் சிலருக்கு இடுப்பு மடிப்புகளில் சிலருக்கு இடுப்பு மடிப்புக்கு கீழே தொடைப்பகுதியில், சிலருக்கு முதுகு அல்லது தோள் பட்டைகளில் இன்னும் சிலருக்கு கழுத்தின் முன்புறமோ பின்புறமோ சதைகள் பருமனாகும். கழுத்தின் முன்புறம் சதை பருமனாகுதல் சிறு நீரகங்கள் சக்தியிழந்து வருவதை உணர்த்துகிறது. கழுத்தின் பின் புறம் போடும் சதை சிறுநீர்ப்பையின் சக்தி குறைவை வெளிப்படுத்துகிறது. பெண்களுக்கு பொதுவாக சதை போட ஆரம்பிக்கும். மார்பகங்களில் அதிகமாக தோற்றமளித்தால் அது பெண்ணோ, ஆணோ வயிற்றுடன் சம்பந்தப்பட்டது. வயிற்றின் வேலை செய்யும் திறன் குறையும் போது அதிகப் பசி எடுப்பதோடு மட்டுமல்லாமல் மார்பகங்களில் ஊனைச் சதை போடும்.

 மார்பகங்களின் பக்கவாட்டில் அக்குகளிலும் அக்குள் மடிப்புகளிலும் சதை விழுமானால் அது சிறு குடல், இருதயம் ஆகிய இவ்விரு உறுப்புகளின் பலவீனத்தைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. இது அவ்வப்போது குணப்படுத்தப்படாமல் போகும் போது தான் நாளடைவில் சிறு குடல் நோயின் காரணமாக ஏற்படும் அஜீரனக் கோளாறுகளும் படபடப்பு, தூக்கமின்மை, மயக்கம், தலைச் சுற்றல் ஆரம்பம் பெற வழி ஏற்படுகிறது.

மேலே கண்ட அனைத்து நோய்களையும் அக்குபங்சர் சிகிச்சையின் மூலம் குணமாக்குவதுடன் தொடர்ந்து இரத்த அழுத்த மாத்திரைகளை பயன்படுத்துவதையும் தவிர்க்கலாம்.

No comments

Powered by Blogger.