Header Ads



யாழ்ப்பாணத்தில் 4 ஆம் நூற்றாண்டு முதல் முஸ்லிம்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் மீட்பு

முஹம்மத் ஜான்ஸின்

அறபிகளுடையது என நம்பப்படும் சில புராதன சின்னங்கள் அல்லைப்பிட்டியிலுள்ள புதிதாக கிணறு ஒன்றை வெட்டும் போது  மீட்கப்பட்டுள்ளன. அந்த தொல் பொருட்களில் ஒன்று சிலையொன்றின் உடைந்த தலைப்பாகத்தை கொண்டிருப்பதாக வரலாற்றுத்துறை பேராசிரியா புஸ்பரட்ணம்  குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில் இலங்கைக்கு வந்த அரபிகள் இஸ்லாமியரல்லாதவர்களாக இருந்ததாக கூறியுள்ளார். அத்துடன் தற்போதுள்ள முஸ்லிம்களின் மூதாதையர்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டில் குடியேறிய தமிழர்களுக்கு பிற்பாடு ஒல்லாந்தர் காலத்திலேயே இலங்கையில் வந்து குடியேறியுள்ளார்கள் என்று நிறுவ முயன்றுள்ளார்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆரம்பகாலத்தில் பிரச்சாரம் செய்த மக்காவாசிகள் கூட சிலை வணக்கத்திலீடுபட்டிருந்தவர்கள் என்பது இங்கு நோக்கப்பட வேண்டும். மேலும் அந்த அரேபிய தீபகற்ப அரபிகள் நாளுக்கு ஒன்று என்ற அடிப்படையில் 360 விக்கிரகங்களை வைத்திருந்ததாக கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வரலாற்று நூல்களில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த அரபிகள் தமது பிரயாணங்களின் போது கடவுள் விக்கிரகங்களையும் காவிச் செல்லக் கூடியவர்களாக இருந்தனர். அவ்வாறான ஒரு சிலை தான் அல்லைப்பிட்டிக்கும் கொண்டுவரப்பட்டிருக்கலாம்.

கி.மு 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே அரபிகள் இலங்கையுடன் பல்வேறு தொடர்புகளை கொண்டிருந்தனர். கி.மு. 300இல் எகிப்தை ஆண்ட மன்னன் மகா அலெக்ஸாண்டர் இலங்கைக்கு விஜயம்  செய்ததுடன் பாவா ஆதம் மலையையும் பார்வையிட்டுள்ளார். எனவே அரபிகளின் தொடர்பு அக்காலத்திலேயே ஆரம்பித்து உள்ளது. அலெக்ஸாண்டரும் அவரது படைகளும் யாழ்ப்பாணம் சாம்பில் துறையூடாகவே இலங்கைக்குள் நுழைந்துள்ளனர். அதற்குப் பிறகும் தொடர்ச்சியாக அரபிகள் இலங்கை துறைமுகங்களினூடாக சீனாவின் கொங்கன் துறைமுகம் வரை சென்றுள்ளனர். கி.பி.4ஆம் நூற்றாண்டில் அனுராதபுரம் தலைநகராக இருந்த போது அரபிகள் அரசனுக்கு சீனாவின் பட்டாடைகள் மற்றும் மற்பாண்டங்களை கொண்டுவந்து விற்றதாகவும் அரசன் அம்மக்களுக்கு அனுராதபுரத்திலும் சாம்பில்துறை துறைமுக பிரதேசத்திலும் காணிகளை வழங்கியதாக மகாவம்சம் கூறுகின்றது.
 
கி.பி. 611 இல் இஸ்லாம் என்ற ஏகதெய்வக் கொள்கை மீண்டும் நிலைநாட்டப்பட்ட போது மக்கா மற்றும் மதீனா அரபிகள் உலகம் முழுவதும்  சென்று தமது மொழியை பேசக் கூடியவர்களிடமும் ஏனைய மொழியைப் பேசக்கூடியவர்களிடமும் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தினர். கி.பி. 623இல் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட போது அங்கிருந்த 360 சிலைகள் உடைக்கப்பட்டன. அந்த செய்தி உலகெங்கும் வாழ்ந்த முஸ்லிம்களிடம் எடுத்துச் சொல்லப்பட்டது. இந்த வகையில் இலங்கையின் யாழ்ப்பாணத்தின் துறைமுக நகரங்களில் குடியேறியிருந்த அரபிகள் இஸ்லாத்தை ஏற்ற பின்னர் சிலைகளை உடைத்திருப்பர். அரபு நாடுகளில் மீட்கப்பட்ட பல சிலைகள் தலையின்றியே காணப்படுகின்றது. அதே போன்று தலை உடைக்கப்பட்ட சிலையே அல்லைப்பிட்டியில் மீட்கப்பட்டுள்ளதால் இஸ்லாத்தை ஏற்ற அரபிகள் அவற்றை உடைத்திருக்கலாம் என்ற முடிவுக்கு வரலாம்.

எனவே யாழ்ப்பாண முஸ்லிம்கள் இலங்கையில் கி.பி. 4 ஆம் நூற்றாண்டிலிருந்து வாழ்ந்து வந்த அரபிகளின் வழிவந்த முஸ்லிம்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
பர்பர் அல்லது பப்பரர்
பேராசிரியர் புஸ்பரட்ணம் நிறுவ முயன்றுள்ளது போல் எகிப்து அல்லது மொரோக்கோ நாட்டு பர்பர் என்றழைக்கப்படும் அரபிகள் தான் யாழ்ப்பாணத்தினூடாக அனுராதபுர அரசர்களுடன் வர்த்தகத் தொடர்புகளை கொண்டுள்ளார்கள் என்று வைத்துக் கொண்டாலும் யாழ்ப்பாணத்தின் ஆரம்ப குடிகள் முஸ்லிம்களின் மூதாதையர் என்பதைத் துணியலாம்.

ஏனெனில் எகிப்து கி.பி.639 டிசம்பர் முதல் 640 டிசம்பர் வரை இடம் பெற்ற இஸ்லாமிய பிரச்சாரங்கள் மற்றும் படையெடுப்புகளால் முற்றாக வெற்றி கொள்ளப்பட்டது. இந்தக் கால கட்டத்தில் எகிப்தில் பெரும்பாண்மையானோர் இஸ்லாத்தை ஏற்றிருந்தனர். கலீபா உமர் (ரலி) அவர்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கலீபாவாக இருந்த காலத்தில் அம்ரு இப்னு ஆஸ் (ரலி) அவர்களின் தலைமையில் 4000 பேர் கொண்ட ஒரு படையை எகிப்துக்கு அனுப்பினார்கள். இந்தப் படை எதிர்பின்ற பல ஊர்களை கைப்பற்றியது. இதன் பிறகு 640 டிசம்பரில் அலெக்ஸான்றியா வெற்றி கொள்ளப்பட்டதுடன் எகிப்து இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது. இக்கால கட்டத்தில் எகிப்பிலிருந்த சிலைகளில் பெரும்பாலானவை அடித்து நொறுக்கப்பட்டள. இந்த எகிப்து மற்றும் மொரோக்கோவைச் சேர்ந்த பர்பர்களே சீன மற்றும் இலங்கையினூடாக கடல்வழி வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் ஆவர்.

இவர்களின் வியாபார பிரதிநிதிகள் இலங்கையின் சில இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். எகிப்து இஸ்லாத்தை ஏற்ற காலத்தில் இலங்கையில் வாழ்ந்தவர்களும் இஸ்லாத்தை ஏற்றிருக்கலாம். அதனால் தான் விலை மதிப்பில்லாத அந்த சிலைகள் உடைத்து நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டுள்ளன. இந்த பர்பர்கள் ஒரு காலத்தில் நயினாதீவை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டிருந்துள்ளார்கள். அதனால் நயினாதீவு  கி.பி. 6 களில் பப்பரத்தீவு என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இதனை பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளார்கள். அதே போன்று ஆனையிரவுக்கு கிழக்கேயுள்ள பப்பரப்பிட்டியிலும் இந்த பர்பர் இன அரபிகள் வாழ்ந்துள்ளார்கள். பிறகு இவர்கள் மிருசுவில் பிரதேசத்துக்கும் சாவகச்சேரி உஸன் பிரதேசத்துக்கும் பிற்காலங்களில் நல்லூருக்கும் இடம்பெயர்ந்துள்ளனர்.

எனவே அல்லைப்பிட்டியில் புதைந்து போயிருந்த இஸ்லாத்துக்கு முன்பான சிலைகள் முஸ்லிம்களின் மூதாதையர் அல்லைப்பிட்டி மண்கும்பான் நயினாதீவு மற்றும் மண்டைதீவு போன்ற பிரதேசங்களில் வாழ்ந்துள்ளதற்கான ஆதாரமாகும்.

குறிப்பு: இஸ்லாம் ஏக தெய்வ கொள்கையை உடைய மார்க்கமாக ஆதம் நபி (அலை) காலத்திலிருந்து காணப்பட்டிருந்தாலும் நூஹ் நபி காலத்தில் சிலை வணக்கம் உருவெடுத்தது. காலத்துக்கு காலம் இச்சிலை வணக்கத்தை தடுக்க நபிமார்கள் அனுப்பப்பட்டார்கள். இவ்வாறு அனுப்பப் பட்ட ஈஸா நபியை இறைவன் உயர்த்திய பின்னால் அவருக்கும் அவருடைய தாய் மர்யமுக்கும் சிலைகளை உருவாக்கி அவற்றை வணங்கும் வழிகேட்டுக்கு கிறிஸ்தவர்கள் மாறினார்கள். இறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்களும் சிலை வணக்கத்தை இறைவனுக்கு இனைவைக்கும் செயல் என சொல்லி ஏக இறைவன் கொள்கையின் பக்கம் மக்களை திசை திருப்பினார்கள். இதனால் சிலை வணக்கம் அரேபியா முதல் மொரோக்கோ, துருக்கி வரையிலும் வடக்கே அஜர்பைஜான் வரையிலும் கிழக்கே இந்தோனேசியா வரையிலும் இஸ்லாம் பரவி அங்கெல்லாம் சிலை வணக்கம் இல்லாதொழிந்தது. 



3 comments:

  1. //மகா அலெக்சாண்டர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதுடன் பாவா ஆதம் மலையையும் பார்வையிட்டுள்ளார்//
    என்பது எந்தவித வரலாற்று ஆதாரமும் இல்லாத வெறும் கற்பனையே அன்றி வேறில்லை.

    பாவா ஆதம் மலை என்பது பொருத்தமற்ற ஒரு பெயராகும்.
    ஆதம் நபிக்கும் இந்த மலைக்கும் இஸ்லாத்தின் அடிப்படையில் எந்தத் தொடர்பும் இல்லை.
    அந்த மலையை தரிசிப்பதோ, அங்கு செல்வதோ இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத ஒரு விடயம் என்பதனையும்
    நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  2. சிலை வணக்கம் மட்டுமல்ல,
    கபுறு வணக்கம்,ராத்திபு, திக்ரு மஜ்லிஸ்,
    துஆ மஜ்லிஸ் போன்ற பெயர்களில் நடப்பவைகளும்இஸ்லாத்தில் இல்லாதவை
    என்பதை இங்கே நினைவூட்டுவது பொருத்தம்.

    ReplyDelete
  3. Both lanka & anonymous should note that I hope you would have learnt about Tholamy's world map. Tholamy has drawn this map in 324 B.C. And Tholamy is the son and the commander of Alexander's army. This history has been recorded by Mahavamsa, Ibn Batuta, protuguese, and English Writers. More than 25 History writers have commended about the visit of alexander to Sri lanka. The chain constructed by Alexander in the Adam's peak is still there.
    Alexander’s visit
    By the time that Macedon’s illustrious son, Alexander the Great, Greek warrior king and empire builder, is believed to have visited Sri Pada (circa 324 B.C.), the peak was already held in veneration. After his subjugation of the Persian empire and the dependencies thereof, Alexander led his forces on to India beyond the Indus to the ancient city of Taxila. He was at last countered by Porus the Indian king and his cohorts of battle trained fighting elephants. These huge beasts were unfamiliar to the Greek cavalry to which they presented a forbidding and formidable obstacle. The terrified horses stampeded and started to scatter out of control in utter panic. On the representation of his generals, fearing mutiny by the army Alexander decided to come to terms with Porus.



    After his skirmish with the Indian king, the restless Alexander decided to detour the southwest coast of India and explore further south where he had heard of the fabulous isle of Sri Lanka known to the early Greeks as ‘Taprobane’. Here reports of the sacred mount of Sri Pada, then dedicated to the Hindu deity Saman and known as ‘Samanthakuty’, attracted his attention. The peak with its proud pinnacle commanding an enchanting prospect was too much of an attraction for the pleasure-bent Alexander to resist.

    Ancient artefacts
    Ashraff, the 15th century Persian poet and chronicler, describes this odyssey of Alexander to Sri Pada in his work ‘Zaffer Namah Skendari’. After landing in the island and indulging himself and his retinue in orgies and revelry he explores the wonders of the island. Here Alexander is known to have sought the assistance of the philosopher Bolinas, a celebrated Greek occultist and magician, to climb the sacred peak then supposed to be zealously guarded by various deities.

    Among the artefacts devised to ascend the almost inaccessible peak were massive iron chains affixed to stanchions of the same metal secured to the bare rock face. The chains were secured to the stanchions with rivets of iron and bronze. Remains of these artefacts still exist. Early pilgrims to the peak sought the assistance of these chains to hoist themselves up to the summit.

    The belief that Alexander visited Sri Pada existed before Ashraff. Ibn Batuta the romantic 14th century pilgrim traveller from Tangiers in Morocco who sojourned in the island visiting the sacred mount, refers to a grotto at the foot of the peak with the name ‘Iskander’ inscribed on it. This ‘Iskander’ and ‘Skendari’ of Ashraff are identical, both names refer to none other than the celebrated Alexander the Great himself. Notes Batuta in his memoirs:

    "The ancients have cut steps of a sort on the vertical rock face, to these steps are fixed iron stanchions with suspended chains to enable pilgrims clamber up to the top with ease and minimum risk. The impression of the Almighty’s foot is observed upon a black and lofty rock in an open space on the summit.

    ReplyDelete

Powered by Blogger.