Header Ads



வடக்கு முஸ்லிம்கள் குறித்து மு.கா. தேர்தல் ஆணையாளருடன் சந்திப்பு

வடக்கு முஸ்லிம்கள் தற்போது வாழும் பிரதேசங்கள் மற்றும் மீளக்குடியமர்ந்துள்ள பிரதேசங்களில் தம்மை வாக்காளர்களாக பதிவுசெய்து கொள்வது பற்றி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்காவை அவரது அலுவலகத்தில்வைத்து கலந்துரையாடியுள்ளனர்.

சுமார் 2 மணித்தியாலம் நீடித்துள்ள இச்சந்திப்பின்போது வடக்கு முஸ்லிம்களுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் குறுpத்து ஆராயப்பட்டுள்ளதுடன், விரைவில் மாவட்ட தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடிவிட்டு முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைகளுக்கு சாதகமான பதிலை பெற்றுத்தருவதாகவும் இதன்போது தேர்தல்கள் ஆணையாளர் வாக்குறுதி கொடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.