Header Ads



போதைப் பாவனைக்கு அடிமையானவர் பெருநாள் தினத்தில் தற்கொலை


(எம் எச் எம் சியாஜ்)


கற்பிட்டி வன்னிமுந்தல் மணல்தோட்டத்தில் வசித்து வந்த ஒரு பிள்ளையின் தந்தை (வயது 23) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று ஈத் பெருநாள் தினமான சனிக்கிழமை (21) கற்பிட்டியில் இடம்பெற்றுள்ளது 


போதைப் பாவனைக்கு அடிமையான ஒன்றரை வயது பெண் பிள்ளையின் தந்தை ( வயது 23) ஈத் பெருநாள் தினமாகிய  சனிக்கிழமை (21) நண்பகல் போதை பாவனைக்கு பணம் தருமாறு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளதாகவும் மனைவி பணம் கொடுக்க மறுத்த நிலையில் ஆத்திரமடைந்து  அயலில் குடியிருப்பாளர்கள் அற்ற வீட்டில் தூங்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.


இத் தற்கொலை சம்பவம் தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகளில் கற்பிட்டி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ் எம் நாசிம் மேற்கொண்டதுடன் மேலதிக பிரேத பரிசோதனைக்காக உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

No comments

Powered by Blogger.