Header Ads



ஜனாதிபதி கோட்டாபய இராஜினாமா செய்கிறார் என்ற தகவல் பொய்யானது


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துவிட்டார் என சமூக வலைத்தளங்களில் பரவலாக செய்திகள் நேற்று (28) வெளியாகியிருந்தன.

எனினும், இந்த அறிக்கையிடல் முழுமையாக பொய்யானது என சமூக வலைத்தளங்களின் பதிவுகளை கண்காணிக்கும் factcrescendo என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது என சிங்கள இணையத்தளமொன்றின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்சிலி ரத்னாயக்கவும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி இராஜினாமா? என்ற செய்தி முற்றுமுழுதும் பொய்யானது எனத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் எதிர்காலங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள், அவருடைய உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களின் ஊடாக அறிவிக்கப்படும்” என்றும் கிங்சிலி ரத்னாயக்க தெரிவித்துள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதவிக்கும் நியமிக்கப்படும் முறைமை, அந்த பதவியிலிருந்து நீக்கும் முறை என்பன தொடர்பில் அரசியலமைப்பில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டள்ளது என்றும் சிங்சிலி ரத்னாயக்க தெரிவித்துள்ளார் என அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. ஆம் அவர் போய்விட்டால் ஆள்பார்வைக்காவது ஒரு கள்ளனுமில்லை.

    ReplyDelete

Powered by Blogger.