Header Ads



நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்


திவுலங்கடவல, மெதிரிகிய குசும் பொகுன பகுதியில் நெஞ்சை பதற வைக்கும் செய்தியொன்று கிடைத்தது. 

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 9 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து கிணற்றில் விழுந்ததுள்ளது. 

பல சந்தர்ப்பங்களில் சிறுவன் அதைக் கொண்டுவருமாறு அப்பாவிடம் கெஞ்சிய போதிலும், அப்பாவால் அந்த பந்தை வௌியில் எடுக்க முடியாமல் போயுள்ளது. 

நேற்று (27) பிற்பகல் 1 மணியளவில் தாயும் இளைய சகோதரனும் வீட்டை விட்டு வெளியேறிய போது, ​​குறித்த சிறுவன் கிணற்றில் இறங்கி பந்தை எடுக்க முற்பட்ட போது கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

உயிரிழந்தவர் குசும் பொக்குண ஆரம்ப பாடசாலையில் தரம் 4 இல் கல்வி கற்கும் சமந்த கவிந்து சந்தருவன் குமார என தெரிவிக்கப்படுகின்றது. TD

No comments

Powered by Blogger.