Header Ads



அலி சப்றியை ஞானசாரர் பதவி விலகச் சொல்வது என்ன கூத்து..? செயலணியில் இருக்கும் தமிழ், முஸ்லிம்கள் உடன் பதவி விலகுங்கள்


அமைச்சர் அலி சப்றியை பதவி விலக சொல்லும் ஞானசார தேரரை, ஜனாதிபதி செயலணிக்கு, இந்த ஜனாதிபதிதான் நியமித்தார்.

அமைச்சர் அலி சப்றியையும், அமைச்சரவை அமைச்சராக இந்த ஜனாதிபதிதான் நியமித்தார். இந்நிலையில், ஜனாதிபதியின் ஞானசாரர், ஜனாதிபதியின் அமைச்சரை பதவி விலக சொல்கிறார்.

இதென்ன கூத்து? என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து

வெளியிட்ட அவர், எதிர்கட்சி அரசியல்வாதிகள் இப்படி சொன்னால் அதில் ஒரு அரசியல் தர்க்கமாவது இருக்கும். அப்படியும் நான் அதை சொல்ல மாட்டேன். அரசை நாம் கடுமையாக எதிர்ப்பது என்பது வேறு.

ஆனால் இந்த அரசுக்குக்கு உள்ளே சிறுபான்மை அமைச்சரவை அமைச்சர்கள் இருப்பது நல்லது. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இதுதான் இலங்கை அரசாங்கம். இவர்தான் ஜனாதிபதி.

அமைச்சர்கள் அலி சப்றி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அங்கே இருப்பதால் தமிழ் பேசும் மக்களின் குறைந்தபட்ச பிரச்சினைகளையாவது அரசாங்க தலைமையின் கவனத்திற்கு கொண்டு வர முடிகிறது.

இந்த குறைந்தபட்ச அவகாசத்தையும் கூட தட்டி பறிக்க இந்த காவி பயங்கரவாதி ஆள் முயல்கிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக இந்த ஆள் பேசுகிறார். நாளை கிறிஸ்மஸ் பிறக்கிறது.

அதற்கும் இவர் எதையாவது திருவாய் மலருவார். முஸ்லிம்களுக்கு எதிராக பலமுறை பலத்தையும் பேசியுள்ளார். இந்துக்களை அரவணைப்பது போல் பம்மாத்து காட்டுகிறார்.

ஆனால், வட கிழக்கில், பெளத்த தொல்பொருள் சின்னங்கள் என்று கூறி இந்து ஆலயங்களை அபகரிக்கும் சதியில் இவரும் இருக்கிறார். இதுபற்றி இவருக்கும், எனக்கும் ஒருமுறை வாக்குவாதமே நடந்தது.

இந்து ஆலய வளவில் பெளத்த தேரரின் சடலத்தை எரித்தவர் தானே இவர்? இந்த ஆள் விசேட நபர். இவர் மீது சட்டம் பாயாது. ஆனால், முகநூலில் எதையாவது சிறுபிள்ளைத்தனமாக எழுதி விடும் தமிழ் பையன்களை தேடி வீட்டுக்கு பொலிஸ் வருகிறது.

இந்த ஆளுக்கு விசேட சட்ட விலக்கு இருக்கிறது. ஆகவே, இவரது செயலணியின் பெயரை "ஒரு ஆளுக்கு ஒரு சட்டம்" என மாற்றி நான் பிரேரிக்கிறேன்.

அதேபோல் இந்த வாயில் வருவதை எல்லாம் பேசும் , இவரது நடத்தையை ஆட்சேபித்து, இந்த செயலணியில் இருக்கும் தமிழ், முஸ்லிம்கள் உடன் பதவி விலக கோருகிறேன். இல்லா விட்டால் இந்த பாவம் இவர்களையும் சேரும் எனவும் கூறுகிறேன். 

4 comments:

  1. ஹக்கிம்-றிசாத் கட்சிகளை சேர்ந்த, அரச ஆதரவு முஸ்லிம் MPகள் என்ன சொல்லுகிறார்கள்?

    ReplyDelete
  2. எல்லாம் ஏப்ரல் 21 பின்னனியில் உள்ள இந்திய இஷ்ரேல் கூட்டு சதி

    ReplyDelete
  3. ஆடு நனைய ஓநாய் அழுத கதை. இவனுக்கு தேவை இந்திய நாய்களின் ஆதிக்கம் இங்கு மேலோங்கி அதன் மூலம் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டங்களை கடந்த அரசாங்கத்தில் இவன் சத்தமின்றி மேற்கொண்டதை போன்று செய்யற்படுத்த

    ReplyDelete

Powered by Blogger.